Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
எனக்கு புற்றுநோய், 1-2 ஆண்டு தான் உயிருடன் இருப்பேன்: பிக் பாஸ் பிரபலம் பகீர் தகவல்
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கமால் ஆர் கான் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகரும், விமர்சகரும், தயாரிப்பாளருமான கேஆர்கே என்கிற கமால் ஆர் கான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதற்கு பெயர் போனவர். பாலிவுட் பிரபலங்களை சமூக வலைதளங்களில் வம்பிழுத்துக் கொண்டிருப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் நான் தான் என்று சொல்பவர். இந்நிலையில் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள விஷயம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
புற்றுநோய்
எனக்கு வயிற்றில் புற்று நோய் அதுவும் 3வது ஸ்டேஜில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நான் இன்னும் 1-2 ஆண்டுகள் தான் வாழ்வேன் என்று கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வெறுப்பு
எனக்கு யாருடைய பரிதாபமும் தேவையில்லை. நான் சீக்கிரம் இறக்கப் போகிறேன் என்பதை உணர்த்தும் யாருடைய போன் காலையும் எடுக்க மாட்டேன். முன்பு போன்றே என்னை வெறுக்கும், விரும்பும் மக்களை பாராட்டுவேன் என்கிறார் கேஆர்கே.
பச்சன்
என் இரண்டு ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமே என்ற கவலை தான் எனக்கு. ஏ கிரேட் படத்தை தயாரிக்க வேண்டும், அமிதாப் பச்சன்ஜியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் இல்லை அவரை வைத்து தயாரிக்க வேண்டும். இந்த இரண்டு ஆசைகளும் என்னுடன் இறந்து போகும் என்று வருத்தப்பட்டுள்ளார் கேஆர்கே.
நேரம்
இனி இருக்கும் நேரத்தை என் குடும்பத்தாருடன் செலவிட விரும்புகிறேன். நீங்கள் என்னை வெறுத்தாலும் சரி, விரும்பினாலும் சரி நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன் என்று கேஆர்கே தெரிவித்துள்ளார்.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?