Don't Miss!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த சீசன் எப்படி இருக்கு...பார்வையாளர்களிடம் கருத்து கேட்ட கமல்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஏழாவது வாரத்தின் இறுதிப்பகுதியை எட்டி உள்ளது. இந்த வாரம் வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 100 நாட்களை கொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை நெருங்கி வருகிறது.
பாலா இயக்கத்தில் ரெட்டை வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த வார தலைவராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் பாத்ரூம் ஏரியா ஆளுமை வருணுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிரூப் தினம் ஒருவருடன் சண்டை போடுவதை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி போகி உள்ளனர்.
இந்த வார எவிக்ஷன்
இந்த வாரம் அபினய், அக்ஷரா, சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, நிரூப், பாவனி, தாமரை ஆகிய ஒன்பது பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மக்களின் குறைவான ஓட்டுக்களைப் பெற்று இசைவாணி தான் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அபிஷேக்கின் ரீஎன்ட்ரி
இந்த வாரம் நடைபெற்ற பிரச்சனைகள், சண்டைகள் குறித்து வார இறுதி எபிசோட்டின் முதல் நாளான இன்று கமல் பேச உள்ளார். ஹவுஸ்மேட்கள் இடையே உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க உள்ளார். இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் ப்ரோமோவில் வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் அபிஷேக் ராஜா, பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்.
அன்பை பொழியும் பிரியங்கா
அபிஷேக்கை பார்த்த பிரியங்கா, ராஜு, நிரூப், தாமரை போன்றோர் சென்று கட்டிப்பிடித்து அன்பை பொழிகிறார்கள். அப்போது ராஜு, நேற்று தான் உன் ஃபிரண்ட் உடன் க்ளோஸ் ஆனேன். நேற்று இரவு தான் பேசி சமாதானம் ஆனோம். அதற்குள் வந்து விட்டாய் என்கிறார் அபிஷேக்கிடம். இதை கேட்டு மற்றவர்கள் சிரித்து கிண்டல் செய்கிறார்கள். பிரியங்கா, ராஜுவை கட்டிப்பிடித்து சமாதானம் ஆகிறார்.
இந்த சீசன் எப்படி இருக்கு
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் கமல், இந்த நிகழ்ச்சி 50 வது நாளை நெருங்கி உள்ளது. உங்களின் கணிப்பில் இந்த சீசன் எப்படி இருக்கிறது என பார்வையாளர்களை பார்த்து கேட்கிறார். அதற்கு ஒருவர், ராஜு டஃப் கன்டஸ்டன்ட்டாக இருக்கிறார் என்கிறார். மற்றொருவர் ஆண்கள் எல்லோருமே கடும் போட்டியாளர்களாக உள்ளனர் என்கிறார்.
அபிஷேக் இல்லாத பிரியங்கா
மற்றொருவர், அபிஷேக் வருவதற்கு முன்பிருந்த பிரியங்கா நன்றாக விளையாடினார் என்கிறார். அதற்கு கமல், அவர் வந்து இப்போது தானே ஒரு நாள் ஆகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என முடிக்கிறார் கமல். வீட்டிற்குள் அபிஷேக்கை கட்டிப்பிடித்து சிரிக்கிறார் பிரியங்கா.
அபிஷேக்கை வெறுக்கும் ரசிகர்கள்
இதை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் 3 வனிதா ரீஎன்ட்ரி. பிக்பாஸ் 5 அபிஷேக் ரீஎன்ட்ரி. வேற யாரையாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக கொண்டு வந்திருக்கலாம். அபிஷேக் எரிச்சலடைய வைக்கும் நபர் என அபிஷேக் ராஜாவின் வைல்ட்கார்டு என்ட்ரிக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video
கலாய்த்த நெட்டிசன்கள்
அதே சமயம், எத்தனை நாளைக்கு தான் பிக்பாசே கன்டென்ட் கொடுத்துட்டு இருப்பார். அது தான் கன்டென்ட் புக்கையே உள்ளே அனுப்பி வைத்து விட்டார் என கலாய்த்து வருகின்றனர். அபிஷேக் வரதுக்கு முன்னாடி பிரியங்காவின் கேம் நன்றாக இருந்தது. இனி அவரின் கேம் கண்டிப்பா மாறும். 50 நாட்கள் முடிவடைந்து விட்டது. ஆனால் இந்த சீசன் சிம்ப்ளி வேஸ்ட் என ஏராளமானோர் தெரிவித்துள்ளனர்.