Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
விஸ்வரூபத்தை திரையிடக் கோரி பெங்களூரில் கமல் ரசிகர்கள் ரத்ததானம்
பெங்களூர் லால்பாக் ரோட்டில் உள்ள ஊர்வசி தியேட்டரில் நேற்று காலை விஸ்வரூபம் திரையிடப்பட்டது. காலை காட்சி ஓடிக் கொண்டிருக்கையிலேயே மதியக் காட்சிக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் மதியம் 1 மணி அளவில் போலீசார் படத்தை ரத்து செய்யுமாறு கூறியதுடன் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து படம் ரத்து செய்யப்பட்டது. டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று கூறியும் பலர் படத்தை பார்த்தே தீருவோம் என்று கூறி அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். படம் இன்று திரையிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நாளை தான் திரையிடப்படும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் விஸ்வரூபத்தை உடனே திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் ஊர்வசி தியேட்டர் முன்பு ரத்த தானம் அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.