Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
42 வருட நட்பு, முரட்டு உருவம், மழலை உள்ளம்: அம்பரீஷ் மறைவுக்கு கமல் இரங்கல்
Recommended Video
சென்னை: நடிகர் அம்பரீஷின் மறைவுக்கு கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலுக்கு பொதுமக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
|
கமல் ஹாஸன்
42 வருடங்களாக என் நண்பர் திரு.அம்பரீஷ். முரட்டு உருவம், மழலை உள்ளம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும், என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ட்வீட் செய்துள்ளார் உலக நாயகன் கமல் ஹாஸன்.
|
குஷ்பு
அப்படியே அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இது உண்மை இல்லை என்று மனம் கூறுகிறது. நண்பர் அம்பரீஷ்ஜியின் திடீர் மரணம் எங்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு.
|
இரங்கல்
என்ன ஒரு அருமையான மனிதர். உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். சுமா மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார். அம்பரீஷின் மரணம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் என்கிறார் அவர்.
|
அதிர்ச்சி
அம்பரீஷ் இல்லாமல் கன்னட திரையுலகமும், கர்நாடகாவும் ஏழையாகிவிட்டது என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டாக்டர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.