என்ன ஆண்டவரே, நீங்க கூட அன்பு பெயரை சொல்ல பயப்படுகிறீர்களா?
சென்னை: கந்து வட்டி கொடுமையால் அசோக் குமார் தற்கொலை செய்தது பற்றி எல்லாம் ட்வீட் போட மாட்டீர்களா என்று திரையுலகினர் முதல் பலர் கேட்ட பிறகு அதுவும் அன்புவின் பெயரை குறிப்பிடாமல் ட்வீட்டியுள்ளார் கமல் ஹாஸன்.
கந்து வட்டி கொடுமையால் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு பைனான்ஸியர் அன்புச்செழியன் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.
திரையுலகினரை ஆட்டிப்படைக்கும் அன்புச்செழியனுக்கு எதிராக வலுவான ஆதாரம் கிடைத்தும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

திரையுலகினர்
எதற்கெடுத்தாலும் ட்வீட் போடுவீர்களே கமல், நம் துறையை சேர்ந்த ஒருவர் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதை தட்டிக் கேட்டு ட்வீட் போட மாட்டீர்களா என்று திரையுலகினர் நேற்று கேட்டனர். இதையடுத்து இன்று காலை ட்வீட் போட்டுள்ளார் கமல் ஹாஸன்.
கண்டனம்
கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள் என ட்வீட்டினார் கமல்.
அரசியல்வாதி
எல்லாரும் வற்புறுத்திய பிறகு ஒரு பதிவு போடுறீங்களே சார். ஆக சிறந்த அரசியல்வாதியாக மாறிட்டீங்க.👏👏
பெயர்
ஆண்டவரே உமக்கு யார் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தாங்கனு தெரியாதா
அவனை பத்தி சொல்லுங்க மொதல்ல அனுதாபம் அப்பறம் தெரிவிச்சிக்கலாம்
அதென்ன ஈயம் பூசின மாதிரி பூசாத மாதிரியும் மொக்க ட்வீட் 🤘🏿என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
தமிழிசை
@DrTamilisaiBJP நீங்க கேட்டேனு நான் இத போடல , எனக்கு தோனுச்சு நான் போட்டேன்.
அன்பு
ஆழ்ந்த அனுதாபங்கள் இருக்கட்டும். அரசியல்வாதியா ஆனபிறகும் அன்பு செழியன்ற பேர் சொல்ல வரல போல😎😎
அதை சொன்னதானா குற்றவாளி இனங்காணுதல் கூடும் நண்பா.
என்னமே போங்க .
அன்புச்செழியன்
அன்புசெழியன் பற்றி ஒரு வார்த்தைக்கூட இல்ல...


Click it and Unblock the Notifications











