கடவுள் வணக்கம் போல.. இது மனித வணக்கம்.. கொரோனா போராளிகளை போற்றிய உலகநாயகன்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் 4 சீசன் அட்டகாசமான தொடக்க விழாவுடன் தொடங்கி உள்ளது.
லைவ் ஆடியன்ஸ் இல்லை என்றாலும், வீடியோ கால் மூலம் ஏகப்பட்ட விர்ச்சுவல் ஆடியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்ச்சியில் ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சென்ட்டிமென்ட் டச்சுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
கடவுள் வணக்கம் சொல்லி நிகழ்ச்சியை தொடங்குவது வழக்கம். நாம் மனித வணக்கம் சொல்லி ஆரம்பிக்கலாம் என உலக நாயகன் மாஸ் ஸ்பீச் கொடுத்து, கொரோனா போராட்டத்தில் பங்கேற்று போலீஸ் அதிகாரியை இழந்த வீரப் பெண்மணியுடன் கமல்ஹாசன் பேசினார்.

அடுத்ததாக மருத்துவர் ஒருவர் கொரோனா காலத்தில் சென்னையில் மக்களுக்கு செய்த உதவிகள் குறித்து பேசினார்.
காலித் எனும் பிணங்களை அடக்கம் செய்யும் நபர் ஒருவர், நூற்றுக் கணக்கான பிணங்களை நல்லடக்கம் செய்தது குறித்து பேசினார்.
அடுத்ததாக சுகாதார பணியாளர் பேசும் போது, கொரோனா வராமல் இருக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்தேன் என்றார். தூய்மை பணிகளை மேற்கொண்டு பல மக்களுக்கு கொரோனா வராமல் தடுத்த அவரிடமும் கமல் பேசி விட்டு, நிகழ்ச்சியை தொடங்கினார்.


Click it and Unblock the Notifications











