Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஒரே நாளில் இரண்டு அடி: சோகமே உருவாக இருக்கும் கமல் ஹாஸன்
சென்னை: தன் நண்பர் கிரேஸி மோகன் இறந்த சோகத்தில் உள்ளார் உலக நாயகன் கமல் ஹாஸன்.
நடிகரும், நாடக எழுத்தாளரும், கதை-வசன கர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் மாரடைப்பால் இன்று பிற்பகல் 2 மணிக்கு உயிர் இழந்தார். அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே கமல் ஹாஸன் அங்கு வந்துவிட்டார்.
கிரேஸி மோகன் உயிர் பிரிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து கிளம்பிய கமல் ஹாஸனின் முகத்தை பார்த்தவர்களுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே கிரிஷ் கர்னாட் காலமான செய்தி அறிந்து கவலையில் இருந்தார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது: கிரேஸி மோகன் பற்றி வைரமுத்து
கிரேஸி மோகன்
திரையுலகில் கமல் ஹாஸன், வசனகர்த்தா கிரேஸி மோகன் கூட்டணியில் உருவான படங்கள் அனைத்துமே எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. மைக்கேல் மதனகாமராஜன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, தெனாலி, காதலா காதலா, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய படங்கள் கமல், கிரேஸி மோகன் கூட்டணியில் உருவான அற்புத படைப்புகள் என்றே கூற வேண்டும்.
சிரிப்பு வெடி
கமல் ஹாஸன், கிரேஸி மோகன் சேர்ந்து அளித்த படங்களை பார்ப்பவர்களால் தொடர்ந்து சிரிக்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கிரேஸி மோகன் தனது வசனத்தால் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர். தனது வசனங்களால் ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த அறிவாளி கிரேஸி மோகன்.
வியப்பு
கிரேஸி மோகன் வசனம் எழுதுவதில் தனக்கென்று ஒரு பாணி வைத்திருந்தார். அவரால் மட்டும் எப்படி இப்படி யார் மனதையும் புண்புடுத்தாமல் வசனம் எழுத முடிந்தது என்று வியந்தவர்கள் பலர். காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களை பயன்படுத்தாத மனிதர் அவர். சிரிப்பு வெடியை சரவெடியாய் வெடித்துவிட்டு தற்போது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டார்.
கவலை
மனது சரியில்லை என்றால் கிரேஸி மோகன் வசனம் எழுதிய படத்தை பார்த்தாலே போதும் சிறிது நேரத்தில் நம் கவலை மறந்து சரியாகிவிடுவோம். அவர் இல்லாவிட்டாலும் தனது படைப்புகளால் தொடர்ந்து நம் கவலைகளுக்கு அருமருந்தாய் இருப்பார் கிரேஸி மோகன். ஊர், உலகையே சிரிக்க வைத்த ஒரு புண்ணியவானுக்கு மாரடைப்பா என்பதை தான் இன்னும் நம்ப முடியவில்லை.