Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கடைசி மூச்சு வரை நன்றி மறவாத மகேந்திரனுக்கு கமல் நேரில் அஞ்சலி
Recommended Video
சென்னை: இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு உலக நாயகன் கமல் ஹாஸன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவு காரணமாக காலமான இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு கமல் ஹாஸன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தான் இயக்குநராக அறிமுகமான முள்ளும் மலரும் படம் இன்றும் பேசப்பட கமல் சார் தான் காரணம் என்று உயிர் இருக்கும் வரை சொல்லிக் கொண்டே இருந்தார் மகேந்திரன்.
இந்நிலையில் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஆசை நிறைவேறாமலேயே சென்ற மகேந்திரன்
நான் பார்த்து வியந்த திறமையாளர்களில் ஒருவர் மகேந்திரன். எனது ஊருக்கு பக்கத்து ஊர் காரர். அதனால் எனக்கு இன்னும் நெருக்கம். முள்ளும் மலரும் படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது. நான் தான் ரஜினி, மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோரை கையை கோர்க்க வைத்து வெற்றிப் படங்கள் எடுங்கள் என வாழ்த்தினேன்.
கிட்டத்தட்ட புரொடக்ஷன் மேனேஜர் அளவுக்கு அந்த படத்திற்காக வேலை பார்த்தேன். அது என் மனதில் பசுமையாக இருக்கிறது. மகேந்திரனை பார்த்து தான் நிறைய இளைஞர்கள் சினிமா எடுக்க கிளம்பி வந்தனர். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.