Don't Miss!
- News ஏப்ரல் மாத ராசி பலன் 2024: சூரியன்.. சுக்கிரன் உச்சம்.. கோடிகளை குவிக்கும் 4 ராசிக்காரர்கள்
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Automobiles அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
அந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்
சென்னை: சினிமா, ஊடகம் மற்றும் கல்வி எப்போதுமே இந்தியாவின் மூன்று குரங்குகளாக இருக்காது என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் எச்சரிக்கை ட்வீட் போட்டுள்ளார்.
ஒளிப்பதிவு சட்டம் 1952-ஐ மறுசீரமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ளப் போகிறது.
இதற்கு தனது கடும் எதிர்ப்பை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்டத்திருத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கண்ணதாசனும், எம்எஸ்வி.,யும் இந்தியாவின் பொக்கிஷங்கள்... புகழ்ந்த கமல்
சினிமாவை கட்டுப்படுத்த
இந்தியா முழுவதும் உள்ள சினிமா துறையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு Cinematograph act 1952ல் திருத்தம் கொண்டு வரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. Cimematograph act 2021 - ஐ அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மூன்று குரங்குகள் அல்ல
கண், வாய், காதுகளை அடைத்துக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா, மீடியா மற்றும் கல்வி இருக்காது என்றும், அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும் என்றும் தனது கண்டனத்தை கமல்ஹாசன் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
குரல் கொடுங்கள்
வரும் ஜூலை 2ம் தேதிக்குள் இது தொடர்பான கருத்துக்களை பொது மக்கள் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக அனைவரும் உங்கள் எதிர்ப்பு குரலை பதிவு செய்யுங்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரம்
இந்த சட்டத் திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி விடும் என நடிகர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை வைத்துள்ளார். இந்தியளவில் ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக தங்களின் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
என்ன பாதிப்பு
ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு அரசியல் ரீதியாக சினிமா துறையை பயன்படுத்திக் கொள்ளும் என்றும், தங்களுக்கு எதிரான கருத்துக்களை யாருமே வெளிப்படுத்த முடியாதபடி நசுக்கி விடும் என்றும், சட்டத்தை மீறினால் கைது நடவடிக்கை, சிறை தண்டனை உள்ளிட்டவைகள் கூட வழங்கப்படலாம் என சமூக வலைதளத்தில் சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.