Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
லண்டன் பட விழாவில்.. "தென் பாண்டிச் சீமையிலே.. தேரோடும் வீதியிலே"
லண்டன்: தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்த கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம், லண்டனில் நடைபெரவுள்ள பக்ரி பவுண்டேஷன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
மணிரத்தினத்தின் முத்தான படங்களில் முக்கியப் படம் நாயகன். கமல்ஹாசன், சரண்யா, நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரின் பண்பட்ட நடிப்பால் உருவாகி வெளியாகி வரலாறு படைத்த படம் இது.
இப்படத்திற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகர் விருது பெற்றார். இளையராஜாவின் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் மக்களை உருக வைத்தது. இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறு.
இந்த நிலையில் நாயகன் திரைப்படம், லண்டனில் நடைபெறவுள்ள பக்ரி பவுண்டேஷன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. ஜூலை 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை இந்தப் பட விழா நடைபெறும். இதில் கமல்ஹாசனும் கெளரவிக்கப்படவுள்ளார்.
இந்தப் படவிழாவில் இந்தியா தவிர இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாட்டுப் படங்களும் திரையிடப்படவுள்ளது. மேலும் கமல்ஹாசனுடன் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.