Don't Miss!
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அர்ச்சனா, ரியோ ராஜ், நிஷா, ஜித்தன் ரமேஷ், சோமசேகர் மற்றும் கேபி என 6 பேர் கொண்ட குரூப் விளையாடி வருவதாக குற்றம்சாட்டிய பாலாவை கமல் ஒரு வழியாக கேள்வி கேட்டு விளாசினார்.
அர்ச்சனா, ரியோ எல்லாம் குரூப்பாக விளையாடுகிறார்கள் என பாலா புகார் தெரிவித்த நிலையில், அதை உடைத்த கேபியின் பேச்சு அட்டகாசம்.
பாலாஜி, சம்யுக்தா ஒரு அணியாக வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜித்தன் ரமேஷ் சூப்பரா பேசினார்.
ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல!
அரைத்த மாவு
அட போங்க பாஸ் என பார்வையாளர்கள் அப்செட் ஆகும் அளவுக்கு பிக் பாஸ் தமிழ் 4ம் சீசனில் ஆரம்பித்ததில் இருந்தே இந்த குரூபிசம் எனும் ஒரே பிரச்சனையை வைத்து அரைத்த மாவை அரைப்போமா. துவைத்த துணியை துவைப்போமா என 56 நாட்களை செம போரிங்காக கடத்தி விட்டனர்.
அதுதான் காரணம்
வார வாரம் ஆட்களை வெளியே அனுப்பி வீட்டை க்ளீன் பண்ணி இருந்தாங்கன்னா, இவ்ளோ கூட்டமும் இருந்திருக்காது, இந்த குழு பிரச்சனையும் வந்திருக்காது. எப்போ தான் பாஸ் டபுள் எவிக்ஷன் எல்லாம் பண்ணுவீங்க என கேட்டு கேட்டு ஆடியன்ஸ் சளித்துப் போய்விட்டார்.
இன்னொரு டிக்கெட்
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதில், இன்னொரு இணைப்பாக ஆசிம் வேற வருவார், வரப் போறாரு, வந்து விட்டார் என்பது போல கடந்த மூன்று வாரங்களாக தகவல்களை பரப்பி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் இறங்கி நிவர் புயலில் இருந்து ஷிவானியை அவர் காப்பாற்றினார் என கலாய்த்து போடப்பட்ட மீம்கள் எல்லாம் வேற லெவல். அவர் வருவாரா?
மூணா அஞ்சா ஏழா?
அர்ச்சனா, ரியோ, சோம் என மூன்று பேர் குரூப் என பாலா பேசினார். பின்னர், 5 பேர் என்றார். அதன் பின்னர், சம்யுக்தா 7 பேர் குரூப் என சமீபத்தில் தானும் அர்ச்சனாவிடம் அடைக்கலம் ஆனதை மனதில் வைத்து சொன்னாரா என்று தெரியவில்லை. வேல் கேங்கில் இதுவரை அர்ச்சனா, ரியோ ராஜ், நிஷா, ஜித்தன் ரமேஷ், சோமசேகர் மற்றும் கேபி என 6 பேர் கொண்ட குரூப் விளையாடி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
சவுக்கடி கொடுத்த ரமேஷ்
கேபியை தொடர்ந்து பாலாவுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக பேசிய ஜித்தன் ரமேஷ், பாலா, ஷிவானி, சம்யுக்தா, ஆஜீத், அனிதா சம்பத், சனம் என நீங்க கூடதான் பெரிய குரூப் என வச்சு விளாசினார். கேபி மற்றும் ஜித்தன் ரமேஷ் பேசியதையும், இந்த வார நிகழ்ச்சியையும் கவனித்த கமல், தனது சாட்டையை ஒரு வழியாக கையில் எடுத்தார்.
பாலாவுக்கு பதிலடி
பாலா அடுத்தவங்களை சுட்டிக் காட்டிய குரூபிசம் பிரச்சனையை கிளப்பிய நிலையில், பாலாவை சுற்றியே இருக்கும் ஒரு குட்டி குரூப்பை சுட்டிக் காட்டி கமல் சார் நல்லாவே சாட்டையை சுழற்றினார். பாலாவால் ஒன்றுமே பேச முடியாமல் போனாலும், அதனை மறைக்க அவர் பெரும் முயற்சியை மேற்கொண்டார்.
இல்லவே இல்லை
பாலா ஷிவானி, சம்யுக்தாவை எல்லாம் ஒரு போதுமே எவிக்ஷனுக்கு நாமினேட் பண்ண வில்லை என பளார் என அறை விட்ட போதும், நான் என் கேமை தனியாத்தான் விளையாடுறேன். நானும் ஆஜீத்தை நாமினேட் பண்ணேன் என மறுபடியும் ஆஜீத்தை வைத்தே எஸ்கேப் ஆகப் பார்த்தும் செல்லாது செல்லாது என கமலிடம் வசமாக மாட்டிக் கொண்டார். தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி!