Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும்.. கமல்ஹாசன் கண்ணீர் மல்க அஞ்சலி!
சென்னை : பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும் என்ற நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video
நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதாப் போத்தன் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஓவியா ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. மீண்டும் சின்னத்திரைக்கு வராங்க.. என்ன நிகழ்ச்சி தெரியுமா?
பிரதாப் போத்தன்
நடிகர் பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து,இவர்கள் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, 1990-ம் ஆண்டு அமலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கேயா போத்தன் என்கிற மகளும் உண்டு. 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.
நேரில் அஞ்சலி
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனியே வசித்து வரும் பிரதாப் போத்தன். இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதாப் பேத்தன் இறந்த செய்தியை கேள்விபட்ட மணிரத்னம் முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பிசி ஸ்ரீராம், ராஜீவ் மேனன், நடிகை கனிகா, நடிகை பூர்ணிமா,ஒய்ஜி மகேந்திரன், கருணாஸ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கமல் அஞ்சலி
இதையடுத்து, மறைந்த நடிகர் இயக்குனர் பிரதாப் போத்தன் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் பிரதாப் போத்தனை அவரது அண்ணன் ஹரி மூலமாகத்தான் தனக்கு தெரியும். அப்போது பிரதாப் பேத்தன் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். மிகத் திறமையான நடிகர். அதை பார்த்து நானும், அனந்துவும் இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் சினிமா வாய்ப்பு கேட்டோம். அதன் பிறகு திரைப்படங்களில் நடித்து வந்தார் என்று தெரிவித்தார்.
முழு திறமையும் வெளிவராமல்
மிகச் சிறந்த எழுத்தாளர், நடிகர் பிரதாப் போத்தன். அவருடைய முழு திறமையும் வெளிவராமல் போனது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும் என்றும் நடிகர் கமல்ஹாசன் பேசினார். அதேபோல இயக்குநர் மணிரத்னமும், பிரதாப் போத்தன் என்னுடைய நீண்டநாள் நண்பர் நல்ல திறமைசாலி இவருடைய இழப்பு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறியிருந்தார்.