Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஓய்வெடுக்கும் அறை.. நல்லா ஜாலியா.. அங்கேயும் போய் ரெஸ்ட் எடுத்தீங்களா.. சுச்சியை நக்கலடித்த கமல்!
சென்னை: வயதானவர்களையும் உடம்பு முடியாதவர்களையும் போட்டியாளர்களாக கூட்டிக் கொண்டு வந்து விட்டு, வந்த உடனே திருப்பி அனுப்புவது.
சுரேஷ் தாத்தாவை அதிரடியாக அனுப்பியது போல, இந்த வாரம் சுச்சியையும் அனுப்ப போறாங்க என்கிற உறுதியான தகவல்கள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், சனிக்கிழமை நிகழ்ச்சியில் சுச்சியை நல்லாவே கமல் நக்கலடித்து பேசினார்.
பாலாவை பஞ்சர் பண்ணுவாருன்னு பார்த்தா.. ரியோவை பஞ்சர் பண்ணிட்டு இருக்காரே.. ஓ சன் டே இருக்குமோ?
ஓய்வெடுக்கும் அறை
போரிங் போட்டியாளரை இன்னும் போரிங்காக மாற்றுவதற்கும், எந்தவொரு வேலையையும் செய்யாமல், நல்லா படுத்துத் தூங்க வைப்பதற்கான இடமாக இந்த சீசனில் ஜெயில் என்கிற வார்த்தையையும் மாற்றி ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளது. அங்க எவ்ளோ நேரம் தூங்கினாலும் நாய் குரைக்காது.
பாலாவை கண்டுக்கல
ஜெயிலுக்கு போகமாட்டேன்னு அடம் பிடித்தது. கண்ணாடி அறைக்குள் சுச்சியிடம் கத்தி பேசியது, பாத்ரூமில் கத்தி அதன் டோரை அடித்தது என ஒரு வார்த்தை கூட பாலாவை கண்டு கொள்ளாத கமல், ஜெயிலுக்குப் போன அனுபவங்கள் குறித்து, சுச்சியிடம் மட்டுமே கேட்டுத் தெரிந்து கொண்டார்.
நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களா
பாலாஜியுடன் மல்லுக் கட்டவே நேரம் சுச்சிக்கு சரியாக இருந்தது. சண்டை முடிந்த பிறகு, தூங்கும் பாலாவுக்கு விசிறி விட்டுக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் சுச்சி. இதையெல்லாம் ஜாலியாக ரசித்துப் பார்த்து விட்டு, ஓய்வெடுக்கும் அறையில் நல்லா ஜாலியா ரெஸ்ட் எடுத்தீங்களா என கேட்டு நக்கல் அடித்தது வேற லெவல்.
ஹேப்பி தான்
ஒரு வகையில் பார்த்தால், பாலா கூட ஜெயிலில் இருந்தது சுச்சிக்கு ரொம்பவே ஹேப்பியாகத்தான் இருந்திருக்கும். பாவம் உடல்நிலை சரியில்லாதவராக தெரிகிறார். சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டால், நன்றாக இருக்கும் என வந்த வேகத்தில் சுச்சியை வீட்டுக்கு அனுப்பும் ஏற்பாடுகளும் நடந்து விட்டன.
எதையும் லீக் பண்ணல
சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்கு வராங்க, ஏகப்பட்ட சுச்சி லீக்ஸ் வெளியாகும், அவங்க ஹோட்டல் இருக்கும் போது யாரோ கொல்லப் பார்த்தாங்க என ஏகப்பட்ட பில்டப் கொடுத்துவிட்டு, இப்படி பீஸ் போன பல்பாக மாற்றி அவரை அவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற முடிவு செய்தது ஏகப்பட்ட பாலா ஹேட்டர்களுக்கு கடுப்பாகவே இருக்கிறது. அட்லீஸ்ட், சொந்த கதை சோகக் கதையை சொல்லக் கூட சுச்சிக்கு சான்ஸ் கொடுக்கவில்லையே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுகின்றனர்.