Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் டபுள் ஆக்ட்.. அதுவும் என்ன ரோல்ன்னு பாருங்க மக்களே!
Recommended Video
சென்னை: தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அரசியல், பிக்பாஸ் என் படுபிஸியாக உள்ளார். இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிக்கப்போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்தார்.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு கமல் அறிவித்த தலைவன் இருக்கின்றான் படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை சந்தித்து கமல்ஹாசன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஏஆர் ரஹ்மான்
இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி வைரலானது. தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏஆர் ரஹ்மான் இணைந்து பணியாற்றவுள்ளதை கமல்ஹாசனும் உறுதி செய்தார்.
இரட்டை வேடத்தில்
இந்நிலையில் தலைவன் இருக்கின்றான் படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.
ஹீரோ, வில்லன்
மேலும் படத்தில் ஹீரோவும் அவர்தான் வில்லனும் அவர்தானாம். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசியலுக்கு வலு சேர்க்கும்
தலைவன் இருக்கின்றான் படம் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கமலின் அரசியல் வாழ்க்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் இந்தப் படம் இருக்கும் என கூறப்படுகிறது.