Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமலுக்கு மக்கள் பிரச்சனையை விட அதிமுகவை விமர்சிப்பது தான் முக்கியம்: அமீர் பொளேர்
Recommended Video
சென்னை: கமல் ஹாஸனுக்கு மக்கள் பிரச்சனையை விட அதிகமுகவை விமர்சிப்பதே பெரிதாக தெரிகிறது என்கிறார் இயக்குனர் அமீர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கமல் அரசியலுக்கு வருவது, அன்புச்செழியன் விவகாரம் உள்ளிட்டவை பற்றி பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
கறார்
பைனான்ஸியர் அன்புச்செழியன் கறாரான ஆள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் நான் அவருடன் வியாபாரம் செய்யவில்லை. அன்புச்செழியனுக்கு அரசியல் பின்புலம் உள்ளது என தெரியும்.
தற்கொலை
அன்புச்செழியனுக்கு பின்னால் எந்தெந்த அரசியல்வாதிகள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. அசோக் குமார் தற்கொலை வழக்கு இதுவரை சரியான பாதையில் செல்கிறது என நினைக்கிறேன்.
உதவி
தலைமறைவாக உள்ள அன்புச்செழியனுக்கு அரசியல்வாதி யாரோ ஆதரவாக உள்ளார். அவர் யார் என்று தெரியவில்லை. தமிழகத்திற்கு ஏற்ற தலைமை கமல் அல்ல.
கமல்
அண்மை காலமாக கமல் அதிமுக அரசை விமர்சிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். அவருக்கு மக்கள் பிரச்சனையை விட விமர்சனம் பெரிதாகிவிட்டது.
அரசியல்
விஜய்யின் வயதை கணக்கில் கொண்டாலும், படங்களின் கணக்கில் கொண்டாலும் அவர் அரசியலுக்கு வந்த உடனே முதல்வர் ஆகும் வாய்ப்பு குறைவு. அவர் உடனே அரசியலுக்கு வருவது சரி அல்ல. அவர் இன்னும் சில காலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
அன்பு
அன்பு அண்ணன் ஓடி ஒளிந்தது போதும். தயவு செய்து வெளியே வந்து சரியான முடிவை எடுங்கள் என அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டதில் இருந்து அன்பு தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.