Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவுக்கு கமல் ஹாஸனை கூப்பிடவே இல்லையாமே!
சென்னை: திருவிழா போன்று நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல் ஹாஸன் அழைக்கப்படவில்லை.
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினியின் நெருங்கிய தோழரை காணவில்லை. இது குறித்து படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கமல்
ரஜினியின் நண்பர் கமல் ஹாஸனை ஏன் விழாவுக்கு அழைக்கவில்லை என்று சௌந்தர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் அவரை அழைக்க தான் நினைத்தேன். ஆனால் அவர் உத்தம வில்லன் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அவரால் வர முடியாது என்றார்.
2 ஆண்டுகள்
கோச்சடையான் படத்தை முடிக்க 2 ஆண்டுகள் ஆகிவிட்டதே என்ற கேள்விக்கு சௌந்தர்யா அளித்த பதில், மோஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தியதால் தான் காலதாமதமாகிவிட்டது என்றார்.
வாலி
பெயர்கள் வருகையில் வைரமுத்துவின் பெயருக்கு பிறகு வாலியின் பெயர் வருகிறதே என்று கேட்டதற்கு, வாலி ஒரு பாடல் தான் எழுதியுள்ளார். வைரமுத்து தான் மீதமுள்ள பாடல்களை எழுதியுள்ளார். அதனால் தான் வைரமுத்துவின் பெயர் முதலில் போட்டப்பட்டுள்ளது என்றார் சௌந்தர்யா.
சீனியர்
வாலி என்ன தான் இருந்தாலும் மூத்த கவிஞராச்சே, அவரது பெயரை முதலில் போட்டிருக்க வேண்டாமா என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு சௌந்தர்யா ஏற்கனவே அளித்த பதிலையே மீண்டும் கூறினார்.