Don't Miss!
- News சட்டம் ஒழுங்கு சரியில்லை; போதையின் பிடியில் தமிழகம்! திமுக மீது பாரிவேந்தர் பாய்ச்சல்!
- Finance இனி தினமும் பார்ட்டி தான்.. சோமேட்டோ கொண்டு வந்த புதிய சேவை..!!
- Technology டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 100% சார்ஜ் வெறும் 20 நிமிடங்களில்..
- Automobiles சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- Lifestyle 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- Sports ஜெய்ஸ்வாலுக்கு டாடா பைபை.. இந்திய அணியின் துவக்க வீரராக மாறிய ஜாம்பவான்.. ரோஹித் அதிரடி முடிவு
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவுக்கு கமல் ஹாஸனை கூப்பிடவே இல்லையாமே!
சென்னை: திருவிழா போன்று நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல் ஹாஸன் அழைக்கப்படவில்லை.
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினியின் நெருங்கிய தோழரை காணவில்லை. இது குறித்து படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கமல்
ரஜினியின் நண்பர் கமல் ஹாஸனை ஏன் விழாவுக்கு அழைக்கவில்லை என்று சௌந்தர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் அவரை அழைக்க தான் நினைத்தேன். ஆனால் அவர் உத்தம வில்லன் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அவரால் வர முடியாது என்றார்.
2 ஆண்டுகள்
கோச்சடையான் படத்தை முடிக்க 2 ஆண்டுகள் ஆகிவிட்டதே என்ற கேள்விக்கு சௌந்தர்யா அளித்த பதில், மோஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தியதால் தான் காலதாமதமாகிவிட்டது என்றார்.
வாலி
பெயர்கள் வருகையில் வைரமுத்துவின் பெயருக்கு பிறகு வாலியின் பெயர் வருகிறதே என்று கேட்டதற்கு, வாலி ஒரு பாடல் தான் எழுதியுள்ளார். வைரமுத்து தான் மீதமுள்ள பாடல்களை எழுதியுள்ளார். அதனால் தான் வைரமுத்துவின் பெயர் முதலில் போட்டப்பட்டுள்ளது என்றார் சௌந்தர்யா.
சீனியர்
வாலி என்ன தான் இருந்தாலும் மூத்த கவிஞராச்சே, அவரது பெயரை முதலில் போட்டிருக்க வேண்டாமா என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு சௌந்தர்யா ஏற்கனவே அளித்த பதிலையே மீண்டும் கூறினார்.