Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே..! - கமல் ஹாஸன்
சென்னை: நல்ல நடிகையான கவுதமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே என வருத்தப்பட்டார் நடிகர் கமல் ஹாஸன்.
கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாபநாசம்'. இதில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடித்துள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்தான் இந்த பாபநாசம். மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய ஜீது ஜோசப்தான் தமிழிலும் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கமல், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், "பாபநாசம் படத்தில் எனக்கு ஜோடியாக கவுதமி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கவுதமி நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
இவரது நடிப்பைப் பார்த்து மிகவும் அசந்து போனேன். அம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒரு நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்து விட்டேனே என்று வருத்தமாக இருந்தது," என்றார்.
மேடையில் இருந்த கவுதமி, இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தார்.