Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கோவணத்தை உருவிட்டோம்ல! - கமலை வெறுப்பேற்றிய பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர்
சென்னை: பதினாறு வயதினிலே படம் வெளியானபோது, இந்தப் படம் அவுட் என்றும், கோவணத்தை உருவிட்டோம்ல என்று கமல் காருக்கு முன் முன்னணி விநியோகஸ்தர் ஒருவர் டான்ஸ் ஆடியதாகவும் கமல்ஹாஸன் தெரிவித்தார்.
இன்று நடந்த 16 வயதினிலே ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், இந்தப் படத்தின் வெற்றி குறித்து குறிப்பிடுகையில், "16 வயதினிலே படத்தில் பணியாற்றிய அத்தனை பேரின் தன்நம்பிக்கைக்காகவே நான் இங்கே வந்திருக்கிறேந்.
இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு, படத்தின் பிஆர்ஓ சித்ரா லட்சுமணன் மாதிரி, நானும் ஒரு பிஆர்ஓ போல ஒவ்வொருவருக்கும் படத்தின் ஸ்டில்களைக் காட்டி நல்ல படம் பெரிய அளவில் போகும் என விளம்பரப்படுத்தினேன்.
ஆனால் ஒருவரும் அதை நம்பவில்லை. அன்றைக்கு பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர் எனப்பட்ட ஒருவர் இந்தப் படம் ஊத்திக்கும் என்றார்.
படம் வெளியானது. அன்று இதே கோடம்பாக்கம் சாலையில் நான் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த பண்டிதர் ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். காரை நான்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். என்னைப் பார்த்ததும் கார் பக்கமாக வந்த அவர், படம் அவுட் என்று கூறிவிட்டுப் போனார்.
நான் காரை வேகமாக்கி, அவரை மறித்து என்ன அவுட் என்றேன்.
அவர் கோவணத்தை உருவிட்டோம்ல என்றார். அந்தப் படத்தில் நான் கோவணம் கட்டி நடித்திருந்தேன். சரி, என் கோவணம் போனாலும் பரவால்ல, தயாரிப்பாளர் கோவணத்தை காப்பாத்தியாகணுமே என கவலைப்பட்டேன்.
ஆனால் ரசிகர்கள் கோவணமல்ல... தங்கக் கிரீடத்தையே தலையில் வைத்து காப்பாற்றினர்," என்றார்.