Don't Miss!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அதையே பேசாதீங்க.. அனிதாவுக்கு சூடு போட்ட கமல்.. துப்புனேனே மேல பட்டுச்சா.. சுரேஷ்க்கும் டோஸ்!
சென்னை: எச்சில் தெறிக்கும் விவகாரம் குறித்து விவாதித்த கமல் அதையே திரும்ப திரும்ப பேசாதீங்க என அனிதாவுக்கு சூடு போட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாளான சனிக்கிழமை நடிகர் கமல் ஹாசன் அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்த வாரம் முழுக்க நடந்த எச்சில் விவகாரம் குறித்து பேசிய கமல் இருவருக்குமே அறிவுரைகளை கூறினார்.
லவ் யூ மச்சான்.. கல்யாண நாளின் கணவருக்காக கண் கலங்கிய அறந்தாங்கி நிஷா.. வாழ்த்து சொன்ன கமல்!
தலைமுறை தலைமுறையா
தொடர்ந்து பேசிய கமல், ஒரு சின்ன ஜோக்குல ஆரம்பிச்சு.. தொடர்கதையா போய்க்கிட்டு இருக்கு.. பாதியிலேயே இருந்து பாக்குறவங்களுக்கு இவங்க ரெண்டு பேரும் காலம் காலமா.. தலைமுறை தலைமுறையா விரோதிகள் போல்ருக்குன்னு நினைப்பாங்க..
துப்பிய கமல்
கிட்ட வந்துப் பார்த்தாதான் தெரியும்.. த்தூ.. இவ்வளவு தானா.. என்பார்கள் என்று கூறுகிறார் கமல். அதற்கு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சிரிக்க.. துப்புனதுல எச்சில் தெறிக்கலயே சக்கரவர்த்தி என்றும் கேட்டார் கமல். அப்போது சின்னப்பிள்ளை தனமாக கெக்கபிக்க என சிரித்தார் அனிதா.
ஆக்ரோஷ ரியாக்ஷன்
தொடர்ந்து பேசிய சுரேஷ் சக்கரவர்த்தி பல முறை கோவத்தை கன்ட்ரோல் செய்து கொண்டிருக்கிறேன் சார். கோவத்தில் நான் ஒரு வார்த்தை சொல்லிவிட்டேன். அந்த வார்த்தையை நான் சொல்லியிருக்க கூடாது. ஆனால் சொல்லிவிட்டேன். மனசுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. அது தவறுதான் என்றார்.
பத்து வரையிலும் எண்ணு
அதற்கு பதில் கூறிய கமல், சொல்லுவாங்க கோவத்துல ஒரு வார்த்தை பேசுறதுக்கு முன்னாடி பத்து வரை எண்ணுன்னு .. அப்போ எதிர்க்க இருக்கும் ஆள்கிட்ட போயிட்டு நீ அஞ்சு எண்ணு நான் அஞ்சு எண்றேன்னு எனக்கு பத்து வரை எண்ணு பொறுமையில்ல.. நான் சொல்ல முடியாது என கூறினார் கமல்.
100வது நாளும் சொல்லாதீங்க
தொடர்ந்து பேசிய கமல் அனிதாவையும் பேசியதையே பேசி பேசி பெரிதுபடுத்தாதீர்கள் என்றார். ஆனாலும் விடாத அனிதா, என்னுடை வெர்ஷனை கேளுங்கள் என அடாவடியாக மூன்றாம் நாள் நடந்த விஷயத்தை மீண்டும் கூறினார். அதற்கு பதில் கூறிய கமல், இதையே 100வது நாளும் வந்து சொல்லாதீர்கள் என்றார்.