Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நீளத்தை குறைத்து... 2 மணி நேரப்படமாக... மீண்டும் ரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ஆளவந்தான்
சென்னை: கமல்ஹாசனின் ஆளவந்தான் படம், நீளம் குறைக்கப்பட்டு இந்த வருடம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
கமல்ஹாசன், ரவீணா டாண்டன், மணிஷா கொய்ராலா, ரியாஸ் கான் உட்பட பலர் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளியான படம், ஆளவந்தான்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இந்தப் படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை.
பாட்டு, நடிப்பு, தயாரிப்பு, இப்போ டைரக்டர்... வெப்சீரிஸை இயக்குகிறார் எஸ்.பி.பி.சரண்
தாயம் கதை
இதன் கதை திரைக்கதை வசனத்தை கமல் எழுதியிருந்தார். 1984-ம் ஆண்டு கமல் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது.
மீண்டும் ரிலீஸ்
கமல் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தை இப்போது மீண்டும் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்துள்ளார்.
நீளம் குறைப்பு
படத்தின் நீளத்தை இரண்டு மணி நேரமாக குறைத்துத் தர கமல்ஹாசனிடம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கேட்டுள்ளதாகவும் அதற்கு கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏப்ரல், மே மாதம்
அந்த காலக் கட்டத்தை விட இப்போது இந்தப் படத்தை ரசிகர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பதால் இப்போது மீண்டும் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.