Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருக்கிறது.. இன்று இரவு.. சஸ்பென்ஸ் வைக்கும் கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி வெளியேறினார்.
பல தேசங்கள்.. துப்பாக்கி.. புல்லட்.. விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஃபர்ஸ்ட் லுக்!
6 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்டுகளாக இருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மற்றொரு போட்டியாளரான கேபி 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.
முதல் புரமோ
இதனை தொடர்ந்து ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா என 5 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
வெல்லப் போவது யார்?
இதில் வழக்கம் போல் கோட் சூட்டில் டக்கராய் வந்துள்ளார் கமல். இதில் பேசும் அவர் அறுவரில் ஒருவர் பணத்துடன் வெளியேறிவிட்டார். எஞ்சிய ஐவரில் வெல்லப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் உங்கள் ஓட்டுக்கள் வந்து சேர்ந்துவிட்டன.
இன்னும் ஒரு திருப்பம்
இந்த 100 நாட்களில் எதிர்பாராத பல திருப்பங்களை நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருக்கிறது. இன்று இரவு.. என தனக்கே உரிய பாணியில் முடித்துள்ளார் கமல். இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் ஒரு திருப்பமா? என அதிர்ச்சியாகியுள்ளனர்.
யூகிக்கும் ஃபேன்ஸ்
அப்படி என்றால் இன்று இரவு யாரையாவது வெளியே அனுப்ப போகிறார்களா என்று கேட்டு வருகின்றனர். அப்படி ஒருவர் வெளியே அனுப்பப்பட்டால் அந்த நபர் யாராக இருக்கும் என்றும் சோம் அல்லது ரம்யா ஆகிய இருவரில் ஒருவராக இருக்கலாம் என்றும் யூகித்து வருகின்றனர்.