Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சீவலப்பேரி பாண்டி இரண்டாம் பாகத்தில் கமல்?
சீவலப்பேரி பாண்டி படம் நினைவிருக்கிறதா? நடிகர் நெப்போலியன் ஹீரோவாகக் களமிறங்கி கலக்கிய படம்.
நெல்லையில் உள்ள சீவலப்பேரி என்ற கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. ஜூவியில் தொடராக வந்தபோது கிடைத்த வரவேற்பைப் பார்த்து திரைப்படமாக எடுத்தனர்.
பாண்டி என்ற அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் நெப்போலியன். அச்சு அசலான அவரது நெல்லைத் தமிழ் உச்சரிப்பும், வெகுளித்தனமும் பாசமும் ஆக்ரோஷமும் மிக்க நடிப்பும் ரசிகர்களின் இதயங்களை வென்றன. நெப்போலியனுக்கு இந்தப் படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இயக்கியவர் பிரதாப் போத்தன்.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார்களாம். முதல் பாகத்தைத் தயாரித்த பிஜி ஸ்ரீகாந்தே இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க்ப போவதாகக் கூறுகிறார்கள்.
இப்படத்தை கவுதம் மேனன் இயக்குகிறாராம். கமல்ஹாஸன் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை எழுதிய சௌபாதான் இரண்டாம் பாகத்தின் கதை வசனத்தையும் எழுதவிருக்கிறார்.