Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சீவலப்பேரி பாண்டி இரண்டாம் பாகத்தில் கமல்?
சீவலப்பேரி பாண்டி படம் நினைவிருக்கிறதா? நடிகர் நெப்போலியன் ஹீரோவாகக் களமிறங்கி கலக்கிய படம்.
நெல்லையில் உள்ள சீவலப்பேரி என்ற கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. ஜூவியில் தொடராக வந்தபோது கிடைத்த வரவேற்பைப் பார்த்து திரைப்படமாக எடுத்தனர்.
பாண்டி என்ற அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் நெப்போலியன். அச்சு அசலான அவரது நெல்லைத் தமிழ் உச்சரிப்பும், வெகுளித்தனமும் பாசமும் ஆக்ரோஷமும் மிக்க நடிப்பும் ரசிகர்களின் இதயங்களை வென்றன. நெப்போலியனுக்கு இந்தப் படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இயக்கியவர் பிரதாப் போத்தன்.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார்களாம். முதல் பாகத்தைத் தயாரித்த பிஜி ஸ்ரீகாந்தே இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க்ப போவதாகக் கூறுகிறார்கள்.
இப்படத்தை கவுதம் மேனன் இயக்குகிறாராம். கமல்ஹாஸன் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை எழுதிய சௌபாதான் இரண்டாம் பாகத்தின் கதை வசனத்தையும் எழுதவிருக்கிறார்.