Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியன் 2 விபத்து.. பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு.. கமல், ஷங்கர் வழங்கினர்!
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் இழப்பீடு வழங்கினர்.
Recommended Video
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் 'இந்தியன் 2'. சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது.
அறுந்து விழுந்தது
கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இரவு சண்டைக் கலைஞர்கள் மற்றும் அரங்கம் அமைப்பவர்கள் பணியில் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ராட்சத கிரேன்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கொண்டிருந்தன. அப்போது திடீரென கிரேன் அறுந்து கீழே விழுந்தது. இதில், ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா (34), ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன் (60), புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மது (29) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்தார்கள்.
கொடூரமான விபத்து
நசரத்பேட்டை போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டரில், இது கொடூரமான விபத்து என்று தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் ரூ.1 கோடி கொடுப்பதாக, தனித்தனியாக அறிவித்து இருந்தனர். லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்திருந்தது.
ஆர்.கே.செல்வமணி
ஆனால், யாருக்குமே பணம் கொடுக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததுதான் காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் வைத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கும் இந்த நிவாரணத் தொகை நேற்று வழங்கப்பட்டது. உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இயக்குநர் ஷங்கர்
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கமல், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். 'உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எனது இரங்கல், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என இயக்குநர் சங்கர் கூறியுள்ளார். படப்பிடிப்பு விபத்து கசப்பான பாடம், சட்டதிட்டங்களின்படி நடப்போம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.