குப்பை தொட்டியில் கொட்டப்பட்ட சாப்பாடு.. ஆரியிடம் மல்லுக்கு நின்று சனம்.. வெளுத்து வாங்கிய கமல்!
சென்னை: குப்பை தொட்டியில் சாப்பாடு கொட்டப்பட்டது தொடர்பாக ஆரியிடம் மல்லுக்கு நின்ற சனம் ஷெட்டியை விளாசி விட்டார் கமல்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் சனம் ஷெட்டிக்கு பாலாஜிக்கு அம்மாவாக இருக்கும் கேரக்டர் கொடுக்கப்பட்டது.
ஏற்கனவே பாலாஜியுடன் நான்சிங்கில் இருந்தார் சனம் ஷெட்டி. இதனால் அவருக்கு அம்மாவாக நடிக்க மறுத்தார்.

யார் கொட்டியது?
இதன்காரணமாக அப்செட்டில் இருந்தார் சனம் ஷெட்டி. அப்போது கிட்சன் டீமில் இருந்த அவரிடம் குப்பை தொட்டியில் சாப்பாடு கொட்டப்பட்டிருந்ததை பார்த்து யார் கொட்டியது என சனம் ஷெட்டியிடம் கேட்டார்.

நானா கூட இருக்கலாம்
அதற்கு குப்பை தொட்டியில் யார் கொட்டுகிறார்கள் என்றெல்லாமா நான் பார்க்க வேண்டும் என்று ஆரியிடம் எகிறினார். மேலும் நானா கூட இருக்கலாம், நான் மைண்ட் அப்செட்டில் இருக்கிறேன். அதனால் என்ன செய்கிறேன் என்ற எனக்கே தெரியவில்லை என்றார்.

சூடான சனம் ஷெட்டி
மற்ற ஹவுஸ்மெட்ஸ் என்ன பிரச்சனை என்று கேட்டதும் ரொம்பவே சூடான சனம் ஷெட்டி ஆக்ரோஷமாக கத்தினார். இந்நிலையில் இந்த பிரச்சனையை இன்று கமலின் முன்பு எழுப்பினார் ஆரி.

புத்திசாலித்தனமாக..
அப்போது சனம் ஷெட்டி, ஆரி மைக்ரோ மேனேஜ் பண்ணியதாக குற்றம்சாட்டினார். மேலும் நானாக இருக்கலாம் என்றுதான் கூறினேன் இல்லை என்று சொல்லவில்லை என புத்திசாலித்தனமாக பேசினார்.

பெரிதாக்கிவிட்டீர்கள்
சனம் ஷெட்டி பேசியதை கேட்ட கமல், சாரி என்று சொல்லி முடித்திருக்க வேண்டிய அந்த பிரச்சனையை ஏன் இவ்வளவு பெரிதாக ஆக்கினீர்கள் என வெளுத்தார். அப்போதும் நான் இல்லை என்று சொல்லவில்லை, இருக்கலாம் என்றுதான் சொன்னேன் என்றார்.

கத்துக்கணும்
அதனை கேட்ட பதில், நல்ல பதில் அது, நானாகக்கூட இருக்கலாம்.. நான் கத்துக்கனும் உங்கக்கிட்டேருந்து என வாரினார். திட்டுவதே தெரியாமல் சனம் ஷெட்டியை விளாசி விட்டார்.


Click it and Unblock the Notifications











