Don't Miss!
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாடி பட படக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்..செம சூடா இருக்கு.. உசுப்பேத்தும் கமல்..இரண்டாவது ப்ரோமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் பேசும் கமல் ஃபைனலிஸ்ட்டுகளை உசுப்பேற்றியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று மாலை நடைபெறுகிறது. இதில் யார் பிக்பாஸ் டைட்டிலை தட்டி செல்ல போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
'ஆன்மாவின் கண்ணாடின்னு சொல்றாங்களே..?' முன்னாள் ஹீரோயின் வெளியிட்ட வாவ் போட்டோஸ்!
ஃபினாலே நிகழ்ச்சி போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பப்படவுள்ளது. வின்னர் ஆரிதான் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள்.
ஆரிதான் டாப்
ஏற்கனவே ஆரி 23 கோடி வாக்குகள் பெற்றிருப்பதாகவும் அவருக்கு அடுத்தப்படியாக உள்ள போட்டியாளர் நான்கரை கோடி வாக்குகள் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடி படபடக்க..
இந்நிலையில் இன்றைய ஃபினாலே நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பேசும் கமல், உள்ளே இருக்கும் 5 ஃபைனலிஸ்ட்டுகளை பார்த்து 5 வெற்றியாளர்கள் நாடி படபடக்க காத்து கொண்டிருக்கிறார்கள்.
கையை உதறும் கமல்
இதில் ஒரு வெற்றியாளர் யார்? என்பதை என்று கேட்டப்படியே தனது கோட்டின் ஒரு பக்கத்தில் கையை வைக்கிறார். பின்னர் , சுடுவது போல் ஊஃப் என கையை உதறுகிறார். தொடர்ந்து அவ்ளோ சுடுது என்று கையை ஊதிக்கொள்கிறார்.
நடன நிகழ்ச்சிகள்
மேலும் உங்களை இன்னும் படபடக்க வைத்து சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. செய்யாமல் இருக்க முடியாது என்று கூறுகிறார். இடையில் அர்ச்சனா மற்றும் சம்யுக்தாவின் நடன நிகழ்ச்சிகளும் காட்டப்படுகின்றன.
ஆரிதான் வின்னர்
இதனை பார்த்த ரசிகர்கள் இன்று போடப்படும் ப்ரோமோக்களே கடைசி என கூறி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், ஆரிதான் வின்னர் என்று எங்களுக்கு தெரியும், நேர்மைக்கு என்றுமே மக்கள் பெரும் ஆதரவு கொடுப்பார்கள் என்று தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.