Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வயலன்ஸின் விளிம்பு.. வேடிக்கை பார்க்க முடியாது.. செருப்பால் அடித்துக்கொண்ட பாலாஜிக்கு கமல் வார்னிங்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் சனம் ஷெட்டியுடனான சண்டையின் போது பாலாஜி தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்ட சம்பவத்தை கையில் எடுத்துள்ளார் கமல்.
கடந்த பிக்பாஸ் சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.
நேஷனல் தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் விளையாடி வருகின்றனர் போட்டியாளர்கள்.
நேத்து பிக்பாஸ் செஞ்சாரு.. இன்னைக்கு கமல் வச்சி செய்றாரு போல.. புரமோவால் ஹேப்பியான நெட்டிசன்ஸ்!
குழாயடி சண்டை
குறிப்பாக பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, அர்ச்சனா ஆகியவர்கள் குழாயடி சண்டை போட்டுக்கொள்வதை போல் மோசமான பாடி லாங்குவேஸையும் வார்த்தைகளையும் வெளிப்படுத்தி வருனிற்னர். நாடா காடா டாஸ்க்கின் போது சுரேஷ் சக்கரவர்த்தியை அவனே இவனே என்று பேசினார் சனம்.
ரெட் கார்டு கொடுங்கள்
அதன்பிறகு சனம் ஷெட்டி அழகிப்போட்டியில் வெற்றி பெற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாக பேசினார். மேலும் அவளே இவளே என்றும் தறுதலை என்றும் தரக்குறைவாக பேசினார் பாலாஜி. அப்போது அவருக்கு ரெட்கார்டு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
காலை நீட்டிய பாலாஜி
ஆனால் நிகழ்ச்சி தரப்பு டிஆர்பியில் மட்டுமே கவனம் செலுத்தியது. இதனால் மீண்டும் மீண்டும் தன் இஷ்டத்துக்கு ஆடி வருகிறார் பாலாஜி. கடந்த வாரம் ஆரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலாஜி, வேற எதையாவது நீட்டி பேசுவேன் எனக்கூறி காலை நீட்டி பேசினார்.
சனமுடன் வாக்குவாதம்
பாலாஜியின் அந்த நடவடிக்கைக்கும் கமல் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ரேங்க் டாஸ்க்கின் போது, சனம் ஷெட்டியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பாலாஜி.
செருப்பால் அடித்துக்கொண்டு
ஒரு கட்டத்தில் சனம் ஷெட்டியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பாலாஜி, தன் காலில் போட்டிருந்த செருப்பைக் கழட்டி தன்னைத்தானே கன்னத்தில் செருப்பால் அடித்துக்கொண்டார்.
மூன்றாவது புரமோ
பாலாஜியின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த ரசிகர்கள் இதையாவது கமல் கண்டிப்பாரா என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
3 செருப்பு வச்சுருக்கார்
இதில் பாலா செருப்பால் அடித்துக்கொண்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் கமல். அதில் பேசும் கமல், இந்த கோவிட் காலத்துல வெளியே போட்டுக்க ஒரு செருப்பு, வீட்டுக்குள்ள ஒரு செருப்புன்னு ரெண்டு வச்சுருக்காங்க. ஆனால் பாலாஜி 3 செருப்பு வச்சுருக்கார்.
பயமுறுத்தி விட்டார்
வெளியில ஒன்னு, வீட்டுக்குள்ள ஒன்னு மூஞ்சில அடிச்சுக்க ஒன்னு என்று கூறுகிறார். தெடர்ந்து சனம் ஷெட்டியிடம் பேசும் கமல், சனம் உங்களை அவமானப்படுத்திட்டாருன்னு நினைச்சீங்க என்றார். அதற்கு சனம் ஆமாம் என்று பதிலளிக்க, எனக்கு பயமுறுத்திவிட்டார் என்கிறார் கமல்.
வேடிக்கை பார்க்க முடியாது
தொடர்ந்து பேசும் கமல், குமுறும் ஒரு கோபமாகதான் இருந்தது. வயலன்சுடைய விளிம்பு அது. இதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது என படு கோபமாக பேசுகிறார் கமல். கமலின் பேச்சைக் கேட்டு பாலாஜியின் முகம் அப்படியே மாறுகிறது. இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ.