Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எங்கப்பாவை பார்த்தால் எப்படி தெரியுது: மகாநதி படத்தால் ஜெமினி மகள் எடுத்த அதிரடி நடவடிக்கை
Recommended Video
சென்னை: சாவித்ரி படத்தை பார்த்து வருத்தம் அடைந்த ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஒரு முடிவு எடுத்துள்ளார்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி வெளியாகி ஹிட்டாகியுள்ளது. நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கீர்த்தியின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.
ஜெமினி கணேசன்
நடிகையர் திலகம் படத்தை பார்த்துவிட்டு சாவித்ரியின் மகள் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் ஜெமினி கணேசன் குடும்பத்தாரோ அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மது
படத்தில் ஜெமினி கணேசனை எடுபுடி போன்றும், சாவித்ரிக்கு மது அருந்தும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் போன்றும் காண்பித்திருப்பது அவரின் மகள் டாக்டர் கமலா செல்வராஜை கவலை அடைய வைத்துள்ளது.
ஹீரோக்கள்
சாவித்ரி தனது கெரியரின் உச்சத்தில் இருந்தபோது ஜெமினி கணேசனும் பிசியான நடிகராக இருந்தார். அப்படி இருக்கும்போது படத்தில் ஏன் உண்மையை காட்டவில்லை என்று குமுறுகிறார் கமலா செல்வராஜ்.
உண்மை
எங்க அப்பா எப்படிப்பட்டவர் என்ற உண்மையை ஒரு ஆவணப்படம் மூலம் உலகிற்கு காண்பிக்கிறேன் என்று கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளாராம்.