செம்ம பார்ட்டி, செம்ம செல்பி: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பார்ட்டி
Recommended Video

சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பார்ட்டி கொடுத்துள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 30 ஆம் தேதி நிறைவடைந்தது. ரித்விகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதிகம் பேசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
அந்த நிகழ்வில் ரித்விகா, ஜனனி, டேனியல், ஷாரிக், சென்ட்ராயன், மகத், மகத்தின் காதலி பிராச்சி, பொன்னம்பலம், பாலாஜி, நித்யா, விஜயலட்சுமி, வைஷ்ணவி மற்றும் என்.எஸ்.கே ரம்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கமல்ஹாசன் அறிவித்தபடி எல்லோருக்கும் விவோ ஸ்மார்ட் போனையும் பரிசளித்துள்ளார். எல்லோரும் கமல்ஹாசனோடு பார்ட்டி செய்து மகிழ்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வில், மற்ற போட்டியாளர்களான மும்தாஜ், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் மற்றும் மமதி சாரி கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அல்லது கலந்து கொண்டவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமலும் இருந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











