Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காமசூத்ரா 3டி பட நடிகை சாய்ரா கான் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்
Recommended Video
மும்பை: காமசூத்ரா 3டி படத்தில் நடித்த சாய்ரா கான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ருபேஷ் பால் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான காமசூத்ரா 3டி படத்தில் நடித்தவர் சாய்ரா கான். பிராந்திய மொழி படங்களில் நடித்து வந்த சாய்ரா காமசூத்ரா 3டி மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.
இந்நிலையில் அவர் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது குறித்து ருபேஷ் பால் கூறியதாவது,
புருஷனை மறைச்சு வை: நடிகையை பார்த்து பயப்படும் ஸ்டார் மனைவிகள்
மரணம்
சாய்ராவின் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சாய்ராவின் மரணத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை. மீடியாக்கள் யாரும் அது குறித்து செய்தி வெளியிடாதது அதிர்ச்சி அளிக்கிறது.
அங்கீகாரம்
சாய்ராவின் நடிப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவர் காமசூத்ரா படத்தில் சிறப்பாக நடித்தும் அவர் பிரபலமாகாதது வேதனை அளிக்கிறது. இது துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
கடினம்
காமசூத்ரா 3டி படத்தில் சாய்ரா அந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். முதலில் அந்த படத்தில் நடிக்க அவரை சம்மதிக்க வைக்க கடினமாக இருந்தது. ஆனால் நடிக்க ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.
சர்ச்சை
காமசூத்ரா படத்தில் நடிக்க சம்மதிக்க சாய்ரா ரொம்பவே தயங்கினார். அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டான முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர். அப்படி இருக்கும்போது அவர் இந்த படத்தில் நடிப்பது அறிந்து பெரிய சர்ச்சை ஆனது. அவரை நடிக்க வைக்க மாதக் கணக்கில் காத்திருந்தோம். ஆனால் அவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்கிறார் ருபேஷ்.