மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தில் 'கனல்' கண்ணன் மனு!

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் 'கனல்' கண்ணன் என்ற வி.கண்ணன். இவர், 'அவ்வை சண்முகி' உட்பட பல சினிமா படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் இவர் மனைவிக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனைவி ஹேமாவதியுடன் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், மனைவியை சேர்த்து வைத்து தனது தாம்பத்ய உரிமையை மீட்டுத் தரும்படி அந்த வழக்கில் அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கு முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட்டில் மே 25-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications