Don't Miss!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாதுன்னே சொன்னாங்க...பெண் இயக்குனர் வருத்தம்
Recommended Video
சென்னை: மகளுக்காக, அம்மா படிக்கப் போகும் கதையை, வேலைக்காது என்றே பலர் சொன்னார்கள், ஆனால், அதை தாண்டி கவனிக்கப்பட்டது என்றார் இயக்குனர் அஸ்வினி ஐயர்.
தமிழில் தனுஷ் தயாரிப்பில், அமலா பால் நடித்த, அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். மும்பையை சேர்ந்த இவர், இந்தி படங்களை இயக்கி வருகிறார்.
இவர் அடுத்து இயக்கும் படம், பங்கா. ஸ்போர்ட்ஸ் படமான இதில் கங்கனா ரனவத், கபடி வீராங்கனையாக நடிக்கிறார். ஜெஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.
இதுதான் வாழ்க்கையா?
இந்தப் படம் பற்றி அஸ்வினி ஐயர் கூறும்போது, 'இது மனித நேயத்தை வெளிப்படுத்தும் படம். வாழ்க்கை என்பதை, வேலை பார்ப்பது, திருமணம் செய்வது, குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்றே முடிவு செய்துவிட்டோம். இதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை இருப்பதை மறந்துவிட்டோம். இந்த படம் ஒரு சவாலை ஏற்றுக்கொள்வதை பற்றி பேசுகிறது. ஒரு பெண்ணின் கனவை வெற்றிகரமாக முடிக்க அவர் குடும்பம் என்ன செய்கிறது என்பது பற்றியும் சொல்கிறோம் என்கிறார் அஸ்வினி ஐயர்.
அம்மா கணக்கு
என் முதல் படமான, அம்மா கணக்கு (இந்தியில், நில் பட்டே சன்னட்டா), மகளின் படிப்பை ஊக்குவிக்க அம்மாவே படிக்க செல்லும் கதையாக அமைக்கப்பட்டது. இந்தக் கதையை கேட்டுவிட்டு இதெல்லாம் ஒர்க் அவுட்டே ஆகாது என்று எச்சரித்தார்கள். ஆனால், அதையும் மீறி படம் கவனிக்கப்பட்டது என்றார் அஸ்வினி.
கங்கனா தலையீடு
இந்தப் படத்தில் கங்கனா, நடிப்பைத் தவிர வேறு எதிலும் தலையிடக் கூடாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டால், அது தவறான தகவல். நீங்களாகவே எதையும் முடிவு செய்துவிடாதிர்கள் என்றார்.
பிடித்துவிட்டால்...
நானும் கங்கனாவும் கடந்த 2 வருடமாக நட்பாக பழகிவருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்னையுமில்லை. கங்கனாவுக்கு சிலரை பிடித்துவிட்டால், அவர்களை கடைசிவரை நன்றாக கவனித்துக்கொள்வார் என்பதைத் தெரிந்துகொண்டேன். இந்தப் படத்தில் நாங்கள் குடும்பல் போல இருந்தோம்' என்கிறார் அஸ்வினி.