twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெபோடிசம்.. போதை மாபியா.. பங்களா இடிப்பு.. சர்ச்சைகளுக்கு பின் தலைவி ஷூட்டிங்கில் பங்கேற்ற கங்கனா!

    By
    |

    சென்னை: ஏழு மாதங்களுக்குப் பிறகு தலைவி ஷூட்டிங்கில் நடிகை கங்கனா ரனவத் பங்கேற்றுள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டு வருகிறது.

    விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, கங்கனா ரனவத் நடிக்கிறார்.

    இன்னும் மூன்று நாள் தான் இருக்கு.. பக்கா புரமோவுடன் மிரட்டும் கமல்ஹாசன்.. பிக்பாஸ் பார்க்க ரெடியா?இன்னும் மூன்று நாள் தான் இருக்கு.. பக்கா புரமோவுடன் மிரட்டும் கமல்ஹாசன்.. பிக்பாஸ் பார்க்க ரெடியா?

    ஜி.வி.பிரகாஷ்குமார்

    ஜி.வி.பிரகாஷ்குமார்

    எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

    ரசிகர்கள் விமர்சனம்

    ரசிகர்கள் விமர்சனம்

    இந்தப் படத்தை கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். இதுபற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான, பிருந்தா பிரசாத் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. கடந்த 7 மாதமாக இதன் படப்பிடிப்பு நடக்கவில்லை.

    சுஷாந்த் சிங் மரணம்

    சுஷாந்த் சிங் மரணம்

    இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனவத் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது. நெபோடிசம் பற்றிய விஷயத்தை அவர்தான் தொடங்கி வைத்தார். அது பெரும் பிரச்னையாக மாறியது. அடுத்து பாலிவுட்டில் போதை மாஃபியாக செயல்படுவதாக பரபரப்பு புகார் கூறினார்.

    கடுமையாகச் சாடினார்

    கடுமையாகச் சாடினார்

    கரண் ஜோஹர், மகேஷ் பட் ஆகியோர்களை கடுமையாகச் சாடினார். பின்னர் மகாராஷ்ட்ரா அரசுக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர் பங்களாவை மும்பை கார்ப்பரேசன் இடித்தது. இது தொடர்பாக அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது.
    இந்நிலையில், 7 மாதங்களுக்குப் பிறகு தலைவி படத்தின் ஷூட்டிங் அவர் இன்று கலந்துகொண்டுள்ளார்.

    Recommended Video

    MGR SET பண்ண RECORD | HISTORY BOOK EP-02 | FILMIBEAT TAMIL
    ஸ்பெஷல் நாள்

    ஸ்பெஷல் நாள்

    இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை கங்கனா, 'இன்றைக்கு எனக்கு ஸ்பெஷல் நாள். 7 மாதங்களுக்கு பிறகு எனது லட்சிய படமான 'தலைவி' ஷூட்டிங்கிற்காக தென்னிந்தியா வந்திருக்கிறேன். இந்த சோதனையான காலகட்டத்தில் உங்கள் ஆசிர்வாதம் தேவை' என்று கூறியுள்ள அவர், தனது செல்ஃபி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    English summary
    Kangana Ranaut on Thursday resumed her 'Thalaivi' shooting after a 7-month-long hiatus caused by the coronavirus pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X