Don't Miss!
- News பம்பரம் இல்லை! துரை வைகோ போட்டியிடுவது தீப்பெட்டியா? கேஸ் சிலிண்டர் சின்னமா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
காசுக்காக இப்படியும் செய்வாரா?: நடிகையை பார்த்து வியக்கும் பிரபலங்கள்
Recommended Video
மும்பை: நடிகை கங்கனா ரனாவத் காசுக்காக ஒரு விஷயம் செய்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
பாலிவுட்டில் பிரபலங்களின் வாரிசுகள் அதிக அளவில் அறிமுகமாகி வருகிறார்கள். வாரிசுகளின் ஆதிக்கத்திற்கு பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் பெரும் காரணம் என்று நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார்.
கரண் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் தனது கருத்தை தெரிவித்தார் கங்கனா.
கங்கனா
வாரிசுகள் ஆதிக்கம் பற்றி கங்கனா, கரண் ஜோஹார் இடையே பிரச்சனை ஏற்பட்டது. கங்கனா ஒன்று கூற கரண் ஒன்று கூற என்று இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
வேடிக்கை
கரண் ஜோஹார், கங்கனா மோதலில் தலையிடாமல் ஓரமாக நின்று பாலிவுட்காரர்கள் வேடிக்கை பார்த்தார்கள். இந்நிலையில் கங்கனா ஒரு விஷயம் செய்துள்ளார்.
ஷோ
கரண் ஜோஹார் நடத்த உள்ள இந்தியாவின் அடுத்த சூப்பர்ஸ்டார்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கங்கனா ரனாவத் சம்மதம் தெரிவித்துள்ளார். இது பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.
காசு
கரண் ஷோவில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன். காசு கொடுக்கிறார்கள் அதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இது வேலை தொடர்பானது என்று கங்கனா விளக்கம் அளித்துள்ளார்.
கருத்து
நான் அவரையோ, அவர் என்னையோ வெறுக்கவில்லை. அவர் என் மீது குற்றம்சாட்டினார், நான் என் நிலைப்பாட்டை விளக்கினேன். நான் அடுத்த முறை பார்ட்டி கொடுக்கும்போது கங்கனாவை நிச்சயம் அழைப்பேன். கடந்த முறை மறந்துவிட்டேன் என்கிறார் கரண்.