Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
3 வீடுகள் இணைப்பு.. கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறினார் கங்கனா.. மும்பை நீதிமன்றம்!
மும்பை: நடிகை கங்கனா ரனாவத், கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர்.
சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலு திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி' படத்தில் நடிக்கிறார்.
அரவிந்த்சாமி
விஜய் இயக்கும் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
ஒன்றாக இணைக்கும்
அடிக்கடி சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவார் நடிகை கங்கனா. இவருக்கு மும்பை கர் பகுதியில் உள்ள 16 மாடி கொண்ட அபார்ட்மென்ட் ஒன்றில் ஐந்தாவது மாடியில் மூன்று வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை ஒன்றாக இணைக்கும் பணிகளை சில வருடத்துக்கு முன் ஆரம்பித்தார்.
மும்பை மாநகராட்சி
இதில் சட்டவிரோதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக்கோரி கங்கனா மும்பை சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடத்திய நீதிபதி எல்.எஸ்.சவான், அவர் மனுவை தள்ளுபடி செய்தார்.
கடுமையாக மீறினார்
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கும் விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது, நடிகை கங்கனா தனது 3 வீடுகளையும் ஒன்றாக இணைப்பதற்காக கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய 6 வாரம் காலஅவகாசம் வழங்கி சிவில் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.