Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கர்ணி சேனா பாதுகாப்புடன்.. மும்பை வரும் கங்கனா ரனாவத்.. டிரெண்டாகும் "Welcome to Mumbai"
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் மகாராஷ்ட்ரா அரசையும் குற்றம்சாட்டி உள்ள நடிகை கங்கனா ரனாவத், மும்பை வருவதை முன்னிட்டு, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஹிமாச்சல் பிரதேசத்தின் மினாலியில் குடும்பத்தினருடன் இந்த லாக்டவுனில் வசித்து வந்த நடிகை கங்கனா ரனாவத், இன்று மும்பை வர உள்ளார்.
சுஷாந்த் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் ஜெயிலில் இருந்திருப்பார்.. சர்ச்சை ட்வீட் போட்ட டாப்சி!
ஒய் பிரிவு பாதுகாப்பு
மும்பை வரும் நடிகை கங்கனா ரனாவத்தின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற பேச்சுக்கள் அடிபட்டதால், அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடிகருக்கும் வழங்கப்படாத அளவுக்கு 11 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் நடிகை கங்கனா ரனாவத்தை பாதுகாத்து வருகின்றனர்.
கிளம்பியாச்சு
ஹிமாச்சல் பிரதேசத்தில் கோயில் ஒன்றில் வழிபட்டு விட்டு, மும்பை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளார். மகாராஷ்ட்ரா தான் தன்னை உருவாக்கியது என்றும், அங்கு செல்வதில் தனக்கு எந்த பயமும் இல்லை என்றும் கூறியுள்ளார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கர்ணி சேனா
கர்ணி சேனா அமைப்பினர், மும்பை விமான நிலையத்தில் இருந்து கங்கனா ரனாவத்துக்கு பாதுகாப்பு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். ஹிமாச்சலில் இருந்து மும்பை வரும் கங்கனா ரனாவத் ஹோம் குவாரண்டைனில் இருக்க வேண்டும் என மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.
கொரோனா சோதனை
இரு முறை நடிகை கங்கனா ரனாவத்துக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளும், நெகட்டிவ் என்றே வந்த நிலையில், துணிச்சலுடன் இன்று மும்பைக்கு விசிட் அடிக்க உள்ளார் கங்கனா ரனாவத். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிபிஐ விசாரணை மற்றும் பாலிவுட்டில் புழங்கும் போதைப் பொருள் குறித்தும் கங்கனா பல விஷயங்களை போட்டு உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பைக்கு வரவேற்கிறோம்
நடிகை கங்கனா ரனாவத், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும், துணிச்சலோடு மும்பை வர உள்ள நிலையில், பாலிவுட் ரசிகர்கள் "Welcome to Mumbai" என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நடிகை கங்கனா ரனாவத்தை வரவேற்று வருகின்றனர். கங்கனா ரனாவத் ரியல் லைஃப் ஜான்சி ராணி என்றும் புகழ்ந்து வருகின்றனர்.