மீண்டும் வீடியோ...மீண்டும் சர்ச்சை...விடாத கங்கனா
மும்பை : நடிகை கங்கனா ரணாவத், சமீபத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, தனக்கு இருந்த அறிகுறிகளையும் விளக்கமாக சமூக வலைதளத்தில் கூறி இருந்தார். தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்து விட்டாத கூறி உள்ளார்.

இதனால் உங்களின் மருத்துவ ரிப்போர்ட்டை காட்டுங்கள் என சமூக வலைதளவாசிகள் பலரும் கேட்டிருந்தனர். இதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்த கங்கனா, எனது ரிப்போர்ட் பற்றி கேட்ட அனைத்து பேய்களுக்காகவும் இதை வெளியிடுகிறேன். ஏனெனில் அவர்கள் தான் உலகையே தங்கள் பிடியில் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ராம பக்தை ஒரு போதும் பொய் சொல்லுவதில்லை. ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டார்.
முன்னதாக கொரோனாவில் இருந்து விடுபட்ட உடல் இன்ஸ்டாகிராமில் கங்கனா வெளியிட்ட வீடியோவில், உண்மை தான். வைரசை நீங்கள் அலட்சியப்படுத்தினால் மக்கள் உங்களை காயப்படும் படி தான் பேசுவார்கள். எப்படி இருந்தாலும் உங்கள் அன்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றி என தெரிவித்தார்.ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன் கங்கனா தனது பதிவில், சிறிது காலம் இருக்கக் கூடிய காய்ச்சல் இதை அதிகமாக மிகைப்படுத்துகிறார்கள். அவற்றை தூக்கி எறியுங்கள் என பதிவிட்டிருந்தார். இதனால் தவறான தகவலை பரப்புவதாக கூறி கங்கனாவின் கணக்கை இன்ஸ்டாகிராம் நீக்கியது.
இப்படி மாறி மாறி பேசி வரும் கங்கனாவின் செயல்பாடுகள் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கங்கனாவின் தலைவி படத்தின் ரிலீஸ், கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது


Click it and Unblock the Notifications











