பட்டுப் புடவையில் வந்து அனைவரையும் கவர்ந்த நடிகை கங்கனா ரனாவத்!
Recommended Video

சென்னை : நடிகை மணிகர்னிகா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரனாவத் பட்டுப்புடவையில் வந்து அசத்தினார்.
தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் நடிப்பில் வரும் 26ம் தேதி வெளியாக இருக்கும் படம் மணிகர்னிகா. ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கை வரலாற்று படம் இது. சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நேற்று வெளியானது. இந்த விழாவில் நடிகை கங்கனா ரனாவத் கலந்துகொண்டார்.
விழாவுக்கு அவர் பொன் நிறத்தினால் ஆனா பட்டுப்புடவையில் வந்திருந்தார். இது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அந்த புடவை அவருக்கு பொருத்தமாக இருந்தது.
பொதுவாக இதுபோன்ற விழாக்களுக்கு நடிகைகள் வரும் போது கிளாமராக தான் உடையணிந்து வருவார்கள். அப்போது தான் புரோமோஷனுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நினைப்பர். ஆனால் இந்திய பாரம்பரிய உடையில் கங்கனா வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications











