Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீண்டும் மோடி பிரதமரானால் தான் நாடு உருப்படும்! ஜெயம் ரவி பட நடிகை அதிரடி!
மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டுமென நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இமாச்சல் பிரதேசத்தில் பிறந்து இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை கங்கனா ரனாவத். பல்வேறு இந்திப் படங்களில் நடித்து பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
பிரபல இயக்குனர் மாதுர் பந்தர்கரின் ஃபேஷன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது கிடைத்தது. இவர் ஜெயம் ரவியுடன் தமிழில் தாம் தூம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது ராணி லஷ்மிபாய் கதாபாத்திரத்தில் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சலோ ஜீத்தே ஹேய்ன்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய வயது வாழ்க்கையை சித்தரிக்கும் குறும்படமான சலோ ஜீத்தே ஹெய்ன் திரைப்படத்தை கங்கனா கண்டு ரசித்தார்.
மோடி படம் அல்ல
அதன்பிறகு பேசிய கங்கனா, இந்தப்படம் மோடியைப் பற்றிய படம் அல்ல. இது நம் ஒவ்வொருவரைப் பற்றிய படம். இந்த சமுதாயத்தின் வளர்ச்சியில் நம்முடைய பங்கு என்ன என்பதை காட்டும் படம் எனக் குறிப்பிட்டார்.
சரியானவர் மோடி
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு ஆண்டு ஆட்சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்கனா, இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மோடி தான் சரியான ஆள் எனக் கூறினார். மேலும், அவர் பெற்றோரால் இந்த அளவுக்கு முன்னேறவில்லை எனவும், தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னேறி இன்று பிரதமர் பதவியை அலங்கரித்து வருகிறார். ஜனநாயகத்தின் மிகச் சிறந்த தலைவர் மோடி தான் எனக் கூறினார்.
ஐந்து ஆண்டுகள் போதாது
மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமா எனக் கேட்கப்பட்டதற்கு.., "ஏன் கூடாது? நிச்சயமாக அவர் தான் வர வேண்டும். நம் நாடு பாதாளக் குழியில் விழுந்து கிடக்கிறது. அதை மீட்பதற்கு ஐந்து ஆண்டுகள் போதாது. அதனால் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.