twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்! - இயக்குநர் சாமி

    By Shankar
    |

    சினிமாவில் தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டு விடுகிறார்கள் என்றார் இயக்குநர் சாமி.

    வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்து, சாமி இயக்கியுள்ள படம் 'கங்காரு'. இப்படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டப் படம் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னோட்டத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

    விழாவில் 'கங்காரு' படத்தின் இயக்குநர் சாமி பேசும்போது, "நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி இருந்ததற்கு நான் மட்டும் காரணமல்ல. சினிமாவில் பலர் அறியாத விஷயம் ஒரு படம் எந்தமாதிரி வரும் என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், தயாரிக்கும் தயாரிப்பாளர், நடிக்கும் நடிகர் எல்லாரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

    Kangaro trailer launch

    இத்தனைக்கும் பிறகு வெற்றி என்றால் எல்லாரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிட்டு ஓடி விடுவார்கள். கங்காரு என் உதவி இயக்குநர் சாய்பிரசாத் சொன்ன கதை. சினிமாவில் ஞாபகம் வைக்கிற படமாக இருக்கும். 5 பாடல்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தேசியவிருது கிடைக்கும். படத்தை என் ஞானத் தந்தை தாணு வெளியிடுகிறார். அவரிடம் 2004ல் முன்பணம் வாங்கினேன். படம் இயக்க முடியவில்லை. 2015ல் 'கங்காரு' வை வெளியிடுகிறார்," என்றார்.

    அக்கா தங்கையுடன் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு!

    இயக்குநர் மனோஜ் குமார் பேசும்போது, "இங்கே மூன்று பாடல்கள் போட்டுக் காட்டினார்கள். இதிலேயே மொத்தக் கதையும் தெரிகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குச் சென்று என் அக்கா தங்கையுடன் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு ஏற்படுத்தியது. வீடு சம்பந்தப்பட்ட கதை,உறவு,சம்பந்தப்பட்ட கதை. நிச்சயம் இது வெற்றிபெறும். 'மிருகம்' சாமி இனி 'கங்காரு' சாமியாகிவிடுவார்," என்றார்.

    இசையமைப்பாளர் ஆன பிறகு தயாரிப்பாளரின் சிரமங்கள் புரிகின்றன!

    இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ் பேசும்போது, "கதைப் பிடித்துப் போனதால்தான் இந்தப் படத்துக்கு இசையமைத்தேன். முதலில் தாலாட்டு பாடலை உருவாக்கினோம். அப்படியே வளர்ந்தன பாடல்கள். இப்படத்தில் அர்த்தமில்லாத பரபரப்பு, ஆர்ப்பாட்டம் எல்லாம் இருக்காது. உண்மையாக இருக்கும். உணர்வு பூர்வமாக இருக்கும். முன்பெல்லாம் நான் பாடிவிட்டுச் சென்று விடுவேன். நான் இசையமைப்பாளர் ஆன பிறகு தயாரிப்பாளரின் சிரமங்கள் புரிகின்றன,'' என்றார்.

    'கங்காரு' க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும்!

    கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது , "பாசத்துக்காக ஓடிய படங்கள் வரிசையில் 'பாசமலர்' ,'முள்ளும் மலரும்' வரிசையில் நான் தயாரித்த 'கிழக்குச் சீமையிலே' படமும் அமைந்ததில் பெருமைப் படுகிறேன். அது 275 நாள் ஓடியது. 'கங்காரு' படத்தை முழுதும் பார்த்துதான் வாங்கி வெளியிடுகிறேன். யாரும் எதிர்ப்பார்க்க முடியாத 'கங்காரு' க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும் படமும் வெற்றி பெறும்," என்றார்.

    English summary
    Director Saamy says that the success of a movie is celebrating by all, but failure of a movie is always imposed on the director.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X