Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கால்வாய் ஆக்கிரமிப்பு: பிரபல கன்னட நடிகரின் வீட்டை இடிக்கும் பெங்களூர் மாநகராட்சி
பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் வீடு கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் அதை இடித்து தள்ள பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் ஐடியல் ஹோம் லே அவுட்டில் கன்னட நடிகர் தர்ஷனின் வீடு உள்ளது. மனைவியை அடித்து கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அதே நடிகர் தான்.
இந்நிலையில் தர்ஷனின் வீடு கால்வாய் நிலத்தில் 6 அடியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் வீட்டை இடிக்க பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து தர்ஷனின் சகோதரர் தினகர் கூறுகையில்,
ஆக்கிரமிப்பு குறித்து மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்டு மாநகராட்சி அதிகாரிகளை அணுகி பேசினோம். எங்கள் வீடு கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அது இடிக்கப்படும் என்றும் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகள் வீட்டின் ஒரு பகுதியை இடிப்பதில் தர்ஷனுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் தற்போது படப்பிடிப்பில் உள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் வேலையை செய்யட்டும் என அவர் தெரிவித்தார் என்றார்.