Don't Miss!
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கன்னட நடிகர் நிகிலுக்கு.. நாளை திட்டமிட்டபடி திருமணம்.. இருவீட்டார் மட்டுமே பங்கேற்பு !
சென்னை : கன்னட நடிகர் நிகிலின் திருமணம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில். இவரும் தந்தையுடன் அரசியலில் ஈடுபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, இவர் "ஜாகுவார்" என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அந்த படம் சிறப்பாக ஓடி நல்ல வெற்றியை நிகிலுக்கு பெற்றுத்தந்தது.
யார் குழந்தைங்க இது..? இவ்ளோ க்யூட்டா பண்றாளே..? பிரபல ஹீரோயினுடன் வீடியோவில் அசத்தும் பாப்பா!
இதையடுத்து, நிகிலுக்கும், ரேவதி என்ற பெண்ணிற்கும் கடந்த பிப்ரவரி மாதம் பிரமாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, ஏப்ரல் 17ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகராவில் திருமணம் நடத்த பெரியோர்களால் முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, கொரோனாவின் தீவிரம் காரணமாக ஊரடங்கு போன்ற பல பிரச்சனைகளில் அனைத்து பணிகளும் முடங்கின. ஆனால், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்திவிடலாம் அதற்குள் ஊரடங்கு முடிந்துவிடும் என்று எண்ணிய நிலையில் 2ம் கட்ட ஊரடங்கு பிறப்பித்து மே3ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் திருமணத்தை எவ்வாறு எப்படி நடத்துவது, இல்லை திருமணத்தை ஒத்திவைத்துவிடலாமா என்று யோசித்து வந்தனர்.
இந்நிலையில், குறித்த தேதியில் திருமணம் நடத்த பெரியோர்கள் முடிவு எடுத்து விட்டனர். ராம்நகராவில் உள்ள பண்ணை வீட்டில் இவர்களது திருமணம் செய்ய ஏற்பாடுகள் முழுமையாக நடந்து வருகின்றது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
கொரோனா பாதிப்பு, ஊரடங்கு அனைத்தும் முடிவுக்கு வந்த பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொள்ள போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதையடுத்து, இருவீட்டாரும் திருமண வேலைகளில் மிகவும் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்