Don't Miss!
- Education 5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சாலை விபத்தில் பிரபல இளம் நடிகர் மூளைச்சாவு.. உறுப்புகள் தானம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
சென்னை: பிரபல கன்னட நடிகரான சஞ்சாரி விஜய் விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.
38 வயதே ஆன கன்னட நடிகரான சஞ்சாரி விஜய் நேற்று முன்தினம் தனது நண்பரை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
லம்போர்கினி காருக்கே டிரெஸ் தச்சுப் போட்ட கிம் கர்தாஷியன்.. இன்னும் 6 கலர்ல ரிலீஸ் ஆகப் போகுதாம்!
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கினார் சஞ்சாரி விஜய். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மூளையில் ரத்தக்கசிவு
உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சஞ்சாரி விஜய். ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
ஆபத்தான கட்டம்
மூளையின் வலது பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தக்கசிவும் ரத்த உறைதலும் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் நடிகர் சஞ்சாரி விஜய் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.
உறுப்புகள் தானம்
இந்நிலையில் இன்று சஞ்சாரி விஜய்க்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
பல படங்கள்..
2011ஆம் ஆண்டு வெளியான ரங்கப்பா ஹாபிட்னா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் சஞ்சாரி விஜய். தொடர்ந்து தசவலா, ஹரிவு, ஒக்கரனே, கில்லிங் வீரப்பன், வர்தமன, சிப்பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
முதல் தேசிய விருது
நானு அவனல்ல அவளு படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் சஞ்சாரி விஜய். இந்தப் படத்திற்காக முதல் தேசிய விருதையும் பெற்றார் சஞ்சாரி விஜய். அவரது திடீர் மறைவு கன்னட சினிமாவை உலுக்கியுள்ளது.
ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்
அவரது மறைவுக்கு கன்னட சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP Sir என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
பெரும் சோகம்
இன்று பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே நாளில் சஞ்சாரி விஜய் மரணமடைந்திருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நினைவுகூரும் ரசிகர்கள்
கடந்த ஆண்டு இதே மாதத்தில் கன்னட சினிமாவின் பிரபல இளம் நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தது, மற்றும் இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணமடைந்ததையும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.