Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'என்னை அறிந்தால்' படத்தை திரையிடும் தியேட்டர்களை கொளுத்துவேன்: கன்னட நடிகர் ஆவேசம்
பெங்களூரு: அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை திரையிடும் தியேட்டர்களை தீ வைத்து கொளுத்திவிட்டு சிறைக்கு செல்ல தயார் என கன்னட நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஹிட் படமான என்னை அறிந்தால் சத்யதேவ் ஐபிஎஸ் என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு இன்று கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளதற்கு கன்னட திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜக்கேஷ்
டப் செய்யப்பட்ட அஜீத்தின் படத்தை கர்நாடகாவில் வெளியிட்டால் அந்த படம் ஓடும் தியேட்டர்களுக்கு தீ வைத்துவிட்டு சிறைக்கு செல்லவும் தயார் என்று கன்னட நடிகரும், அரசியல்வாதிகயுமான ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.
வாட்டாள் நாகராஜ்
பிற மொழி படங்களை தமிழில் டப் செய்வதை கண்டித்து வரும் வாரம் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக கன்னட சலுவாளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
சிவராஜ்குமார்
கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோவான சிவராஜ் குமாரும் டப்பிங் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டப்பிங் படங்களுக்கு எதிராக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரிலீஸ்
கடும் எதிர்ப்புக்கு இடையே சத்யதேவ் ஐபிஎஸ் படம் இன்று கர்நாடகாவில் ரிலீஸாகியுள்ளது. எதிர்ப்பு காரணமாக பெங்களூரில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. ஆனால் தியேட்டர் பற்றாக்குறையால் பெங்களூரில் ரிலீஸ் செய்யவில்லை என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.