டெய்லர் ரவி மூலம் சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட கன்னட நடிகை

By Sudha

சென்னை: டெய்லர் ரவி என்ற புரோக்கர் மூலம் சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட கன்னட நடிகை பிரியா என்பவரை போலீஸார் பிடித்துள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டு மெக்னிக்கல்ஸ் சாலையில் பிரபலமான ஒரு மருத்துவமனை இருக்கிறது. அதற்கு அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சில வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம். இதற்கான வாடகையை பன்னீர்செல்வம் என்பவர் வசூலித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த அடுக்குமாடிக்குடியிருப்பில் இரவில் ஆண்கள் பெண்களுடன் வந்து செல்வதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

நேற்று இரவு தனிப்படை போலீசார் குடியிருப்பில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 2 வாலிபர்கள் 2 பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுவதற்கு அழைத்து வந்தது தெரியவந்தது. அந்த பெண்களை போலீசார் மீட்டனர்.

அதில் ஒரு பெண்ணின் பெயர் பிரியா. பெங்களூரைச் சேர்ந்த இவர் கன்னட நடிகை ஆவார். இவர்களை அண்ணாநகரைச் சேர்ந்த விபசார புரோக்கர் டெய்லர் ரவி என்பவர்தான் அனுப்பி வைத்து இருந்தது தெரியவந்தது. 2 பெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அந்த பெண்களுடன் இருந்த வாலிபர்கள் பிரசன்னா, சிவக்குமார் மற்றும் தங்க இடம்கொடுத்த குடியிருப்பு மானேஜர் பன்னீர்செல்வம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெய்லர் ரவியைத் தேடி வருகின்றனர் போலீஸார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X