விமானநிலையத்தில் 14.8 கிலோ தங்கத்துடன் கைதான நடிகை..இதில் யார் யாருக்கு தொடர்பு.. விசாரணை தீவிரம்!
பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்தை கடத்திய கன்னட நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்பிற்கு ஜோடியாக 'மாணிக்யா' என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். கர்நாடகாவில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்பதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி இவர், விமான நிலையத்தில், பாதுகாவலர்களின் கண்ணில் மண்ணை தூவி தங்கத்தை கடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்த நடிகை ரன்யா ராவ், இவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் செய்து வந்ததால், டிஆர்ஐ கண்காணிப்பில் இருந்தார். அவர், தனது ஆடைகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்தும், கண்ணுக்குத் தெரியாதபடி தங்கத்தை கடத்திச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்ததை அடுத்து, விமானநிலையில் வந்த அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, அவரது உடமைகளை பரிசோதனை செய்த போது, அதில் இருந்த 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

நடிகை கைது: மாணிக்யா படத்தில் நடித்து பிரபலமான ரன்யா ராவ், கர்நாடகாவில் பணியாற்றும் டிஜிபி தரவரிசை ஐபிஎஸ் அதிகாரியின் மகளாவார். விமான நிலையத்திற்கு வந்தவுடன், ரன்யா டிஜிபியின் மகள் என்று கூறி, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த அதிகாரிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? இல்லை இந்த கடத்தல் அவர்களுக்கு தெரியாமல் நடந்ததா என டிஆர்ஐ இப்போது விசாரித்து வருகிறது.
போலீசார் விசாரணை: அதுமட்டுமில்லாமல், அவருக்கு சட்ட அமலாக்கப் பணியாளர்களின் ஆதரவு இருந்ததா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 15 நாட்களில் அவர் நான்கு முறை துபாய் சென்றிருப்பதைக் கவனித்த DRI அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கியது. இந்த உளவுத்துறையின் அடிப்படையில், ஏஜென்சி தகவல் வந்ததை அடுத்து ரன்யாவை பரிசோதனை செய்து அவரை கைது செய்து பெங்களூரில் உள்ள டிஆர்ஐ தலைமையகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின் நேற்று அவரை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Click it and Unblock the Notifications











