Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கமலைக் காப்பி அடிக்கப்போகும் கன்னட பிக்பாஸ்!
சென்னை : தமிழில் விஜய் டி.வி நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். வார இறுதி நாட்களில் நிகழ்ச்சிக்கு வரும் கமலின் பேச்சுக்கும், அவரது கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கும் பலர் ரசிகர்களாக உள்ளனர். கமல் கொடுக்கும் ரியாக்ஷன்கள் சமூக வலைதளங்களிலும் மிகப் பிரபலமாகி வருகின்றன.
நிகழ்ச்சியின்போதே அவர் சமகால அரசியல் குறித்தும், ஊழல் அரசியல்வாதிகளைப் பற்றியும் பேசி வருகிறார். மக்களின் பிரச்னைகள் குறித்தும், மத்திய மாநில அரசுகள் குறித்தும் தைரியமாகப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அரசியல் பார்வையாளர்களும் அந்நிகழ்ச்சியைக் கவனித்து வருகிறார்கள்.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் நடத்தி வருகிறார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் 4-வது சீசன்களை நடிகர் சுதீப் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், கன்னட பிக்பாஸ் 5-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், கமல் தான் உண்மையான பிக்பாஸ் என்றும் கூறியுள்ளார் சுதீப். மேலும், கமலிடமிருந்து தான் கற்றுக்கொண்ட விஷயங்களை தான் தொகுத்து வழங்கப்போகும் ஐந்தாவது சீசனில் வெளிப்படுத்தப் போவதாகவும் சுதீப் தெரிவித்துள்ளார்.