Don't Miss!
- News எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
திருமணத்தை நிறுத்திவிட்டு பேசுற பேச்சை பார்த்தியா?: நடிகையை விளாசும் ரசிகர்கள்
பெங்களூர்: வருங்கால கணவரிடம் தான் எதிர்பார்ப்பது என்ன என்று நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த கன்னட ரசிகர்களோ அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடகாவை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மூலம் கோலிவுட் வந்துள்ள ரஷ்மிகா தளபதி 64 படத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கோலிவுட்டில் நுழைந்த வேகத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
ரஷ்மிகா
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள டியர் காம்ரேட் படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் விஜய் மற்றும் ரஷ்மிகா கலந்து கொண்டு வருகின்றனர்.
கணவர்
டியர் காம்ரேட் விளம்பர நிகழ்ச்சிகளில் ரஷ்மிகா சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் உண்மையானவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும். அவருடன் சேர்ந்து இருக்க வேண்டும், நிறைய நேரம் இருக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என ரஷ்மிகா தெரிவித்துள்ளார்.
மனசு
என் வருங்கால கணவரின் வயது முக்கியம் இல்லை. அவர் ரொமான்டிக்காக இருந்தால் வயது வித்தியாசம் பெரிய விஷயம் இல்லை. இது தான் நான் என் வருங்கால கணவரிடம் எதிர்பார்ப்பது என்று ரஷ்மிகா தெரிவித்துள்ளார். ரஷ்மிகாவின் பேட்டியை பார்த்த கன்னட ரசிகர்களோ திருமணத்தை நிறுத்திவிட்டு வருங்கால கணவர் பற்றி பேசுகிறீர்களா, சபாஷ் என்று கூறி அவரை விளாசியுள்ளனர்.
ரக்ஷித் ஷெட்டி
ரஷ்மிகா மந்தனாவுக்கும், அவர் நடித்த கிரிக் பார்ட்டி பட ஹீரோ ரக்ஷித் ஷெட்டிக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பிறகு 2018ம் தேதி செப்டம்பர் மாதம் அவர்கள் பிரிந்துவிட்டனர். ரஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் அவர் ரக்ஷித் ஷெட்டியை பிரிந்ததாக பேச்சு கிளம்பியது. அதில் இருந்து கன்னட ரசிகர்கள் ரஷ்மிகாவை அடிக்கடி திட்டுகிறார்கள். திருமணத்தை நிறுத்தியவர் தானே நீங்க என்று நேரம் கிடைக்கும்போது எல்லாம் திட்டுகிறார்கள்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!