Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திருமணத்தை நிறுத்திவிட்டு பேசுற பேச்சை பார்த்தியா?: நடிகையை விளாசும் ரசிகர்கள்
பெங்களூர்: வருங்கால கணவரிடம் தான் எதிர்பார்ப்பது என்ன என்று நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த கன்னட ரசிகர்களோ அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடகாவை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மூலம் கோலிவுட் வந்துள்ள ரஷ்மிகா தளபதி 64 படத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கோலிவுட்டில் நுழைந்த வேகத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
ரஷ்மிகா
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள டியர் காம்ரேட் படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் விஜய் மற்றும் ரஷ்மிகா கலந்து கொண்டு வருகின்றனர்.
கணவர்
டியர் காம்ரேட் விளம்பர நிகழ்ச்சிகளில் ரஷ்மிகா சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் உண்மையானவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும். அவருடன் சேர்ந்து இருக்க வேண்டும், நிறைய நேரம் இருக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என ரஷ்மிகா தெரிவித்துள்ளார்.
மனசு
என் வருங்கால கணவரின் வயது முக்கியம் இல்லை. அவர் ரொமான்டிக்காக இருந்தால் வயது வித்தியாசம் பெரிய விஷயம் இல்லை. இது தான் நான் என் வருங்கால கணவரிடம் எதிர்பார்ப்பது என்று ரஷ்மிகா தெரிவித்துள்ளார். ரஷ்மிகாவின் பேட்டியை பார்த்த கன்னட ரசிகர்களோ திருமணத்தை நிறுத்திவிட்டு வருங்கால கணவர் பற்றி பேசுகிறீர்களா, சபாஷ் என்று கூறி அவரை விளாசியுள்ளனர்.
ரக்ஷித் ஷெட்டி
ரஷ்மிகா மந்தனாவுக்கும், அவர் நடித்த கிரிக் பார்ட்டி பட ஹீரோ ரக்ஷித் ஷெட்டிக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பிறகு 2018ம் தேதி செப்டம்பர் மாதம் அவர்கள் பிரிந்துவிட்டனர். ரஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் அவர் ரக்ஷித் ஷெட்டியை பிரிந்ததாக பேச்சு கிளம்பியது. அதில் இருந்து கன்னட ரசிகர்கள் ரஷ்மிகாவை அடிக்கடி திட்டுகிறார்கள். திருமணத்தை நிறுத்தியவர் தானே நீங்க என்று நேரம் கிடைக்கும்போது எல்லாம் திட்டுகிறார்கள்.